HomeBreaking Newsகுருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்.. தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது... டாக்டர் ராமதாஸ் கொதிப்பு!

குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்.. தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது… டாக்டர் ராமதாஸ் கொதிப்பு!

-

- Advertisement -

குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே தர்மம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையேயான பனிப்போர் வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ் தன்னை மிஞ்சி அன்புமணி ராமதாஸ் செயல்படுவதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்’ என்று பாரதியார் சுதந்திரப் போராட்டம் குறித்து உருக்கமாக இப்படி பாடியிருக்கிறார். ஆக, எனக்கும், செயல் தலைவருக்கும் போய் கொண்டிருக்கும் பிரச்னை முழுவதும் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

எங்கள் இருவருடைய சமரசப் பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது. அவர்கள் இங்கே வந்தார்கள்… நான் அங்கே போனேன்… பேச்சுவார்த்தை சென்றது. ஆனால், கடைசியில் பேச்சுவார்த்தை ‘டிரா’வில் முடிந்துவிட்டது.

14 பஞ்சாயத்துக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் நான் தொடங்கிய 34 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் . இது தான் தலைவிதி என்று ஏற்றுக்கொண்டேன். என்ன அதிசயம்? எல்லாரும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். ‘நான் இங்கே இருந்துகொண்டு கட்சியை வளர்ப்பது… அவர் வெளியே சென்று மக்களைப் பார்ப்பது’ – அது தான் அவர்கள் சொன்ன தீர்ப்பு. 14 பஞ்சாயத்துகளோடு இதுவும் ஒரு பஞ்சாயத்து ஆனது.

அன்புமணிக்காக தலைவர் பதவி விட்டுத்தர தயார் என்று கூறினேன். அதற்காக, மாநாட்டிற்கு முன்பு, கௌரவ தலைவர், சமூக முன்னேற்ற சங்கத்தினுடைய தலைவர் இருவரும் அன்புமணியை சந்திக்க செல்ல இருந்தனர். ஆனால், ‘வரவேண்டாம்… போன்லேயே சொல்லுங்க’ என்று அவர் கூறிவிட்டார்.

மாநாட்டு மேடையிலேயே இதை எழுதி தருகிறேன் என்று ஐயா சொல்கிறார்’ என்று அவர்கள் அவரிடம் பேசினார்கள். அதற்கு அன்புமணி, ‘அவரை நம்ப முடியாது’ என்று கூறிவிட்டார். ஆக, நான் தயாராக இருந்தும், அப்படி நடந்துவிட்டது. இதன் பிறகு தான், ‘நீயா… நானா’ என்று என்னுள் உள்ள இயற்கையான கோபம் பொங்கியது.

‘ராமதாஸ் பெயரைத் தான் பின்னால் போட்டுக்கொள்கிறோமே… அவனுக்கு என்ன தர வேண்டும்; கொள்ளு பேரன்களோடு விளையாடட்டும்’ என்று கூறினார். என்னால் அப்படி இருக்க முடியாது…

மக்களோடு 46 வருடங்களாக பழகி வருகிறேன். அவர்கள் என்னை உயிராக நினைத்து வருகிறார்கள். அவர்களை நான் உயிருக்கும் மேலாக கடவுளாக நினைக்கிறேன். அவர்கள் என்னை குலதெய்வமாக நினைக்கிறார்கள். நான் அவர்களைத் தொண்டர்களாக அல்ல… வழிகாட்டிகளாக நினைக்கிறேன்.

இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? உரிமை இல்லையா என்று கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது.. `கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே, என்னை கழுத்தைப் பிடித்து தள்ளும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் இருந்திருக்கின்றன என்றார் டாக்டர் ராமதாஸ்.

என்னைப் பார்க்க வரும் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் தொலைப்பேசியில் பேசி அவரே தடுத்து நிறுத்துகிறார்.
அன்று அமைதி காத்திருந்தால், அன்புமணிக்கு தானாக தலைமை வந்திருக்கும். அன்று அதிகாலை 3 மணி வரை மாவட்ட செயலாளர்களிடம் பேசியிருக்கிறார்கள். இதில் தப்பித்தவறி 8 பேர் என்னை பார்க்க வந்தார்கள்.

ஒரு பொய்யான தகவலை சொல்லி என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடுக்க பார்க்கிறார் என்று கூறியிருக்கிறார். இதை ஒரு மூடன், மூர்க்கன், முட்டாள் யாராவது செய்வார்களா? இதெல்லாம் நடக்காமல் இருந்திருந்தால், ஓரிரு ஆண்டுகளில், நானே முன்நின்று உனக்கு முடிசூட்டு விழாவை நடத்தி இருப்பேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு முடிசூட்டு விழா நடந்தது. அப்போது அவர் தான் தலைவர் ஆனார். நான் அப்போது ஆனந்த கண்ணீர் விட்டேன். ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று இரு நிகழ்வுகளில் என் அருமை நண்பர் பழ.கருப்பையா கூறியிருந்தார்.

‘தந்தைக்கு பிறகே தனயன், ஐயாவுக்கு பிறகே அன்புமணி’ என்று இப்போது எல்லோரும் சொல்கிறார்கள். குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே தர்மம் ஆகும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

MUST READ