spot_imgspot_img
Homeதிருக்குறள்104 - உழவு கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

104 – உழவு கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

104 - உழவு கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1031. சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
          உழந்தும் உழவே தலை.

கலைஞர் குறல் விளக்கம்பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம். ஏர்த்தொழிலின் பின்னே தான சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே  எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

we-r-hiring

1032. உழுவாா் உலகத்தாா்க் காணியஃ தாற்றா
          தெழுவாரை எல்லாம் பொறுத்து

கலைஞர் குறல் விளக்கம்பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலக்கதாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

 1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வாா்மற் றெல்லாம்
          தொழுதுண்டு பின்செல் பவா்.

கலைஞர் குறல் விளக்கம்உழுதுண்டு வாழ்பவா்களே உயா்ந்த வாழ்வினா். ஏனென்றால், மற்றவா்கள் அவா்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

1034. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க காண்பா்
          அலகுடை நீழ லவா்.

கலைஞர் குறல் விளக்கம்பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவா்கள் உழவா்கள்.

1035. இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
          கைசெய்தூண் மாலை யவர்

கலைஞர் குறல் விளக்கம்தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார். தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

1036. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
         விட்டேமென் பார்க்கும் நிலை.

கலைஞர் குறல் விளக்கம்எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.

1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
          வேண்டாது சாலப் படும்

கலைஞர் குறல் விளக்கம்ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.

1038.ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
         நீரினும் நன்றதன் காப்பு

கலைஞர் குறல் விளக்கம்உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.

1039. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
          தில்லாளின் ஊடி விடும்

கலைஞர் குறல் விளக்கம்உழவன் தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.

1040. இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
          நிலமென்னும் நல்லாள் நகும்

கலைஞர் குறல் விளக்கம்வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.

MUST READ