அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து 10 நாட்களுக்குள் முடிவு- தேர்தல் ஆணையம்
அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது பொதுச்செயலாளர் நியமனம், மூல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் வாதம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த மனு மீது 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க உத்தரவிட்டு டெல்லி ஐகோர்ட் வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில் அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் எனவ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அதிமுக சட்ட விதிகளை திருத்தியதை ஆணையம் அங்கீகரிப்பதை பொறுத்தே பழனிசாமி பொதுசெயலாளர் ஆவாரா என்பது தெரியவரும்.