தாய்லாந்து-கம்போடியா இரு நாடுகளுக்கு இடையேயான மோதலின் எதிரொலியாக ஏற்கெனவே அந்நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியா தூதரகம் அறிவுறுத்தி நிலையில், அவரச உதவி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் அறிவித்துள்ளது.எல்லைப் பிரச்சனை தொடர்பாக தாய்லாந்து- கம்போடியா இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இதன் காரணமாக தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் தொடர்ந்து அமைதியின்மை நீடித்து வருவதால் 7 மாகாணங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என தாய்லாந்து ஆணையம் அறிவித்திருந்தது. அதனை இந்திய தூதரகமும் ஏற்று தாய்லாந்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இந்தியா்கள் யாரும் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியது. மூன்றாவது நாளாக நீடிக்கும் இந்த போரில் இருநாடுகளும் பீரங்கி குண்டுகள் மற்றும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை இரு நாடுகளின் தரப்பிலும் முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனா். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மோதல் எதிரொலியாக தாய்லாந்து- கம்போடியா இரு நாடுகளுக்கு இடையேயான மோதலின் எதிரொலியாக அந்நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியா தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. எல்லைப் பிரச்சனை தொடர்பாக தாய்லாந்து- கம்போடியா இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இதன் காரணமாக தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் தொடர்ந்து அமைதியின்மை நீடித்து வருவதால் நாடுகளின் எல்லை வழியாக இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கம்போடியாவில் இருக்கும் இந்தியர்கள் அவசர தேவைக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியர்களுக்காக 085592881676 என்ற அவசர உதவி எண்ணையும் அறிவித்துள்ளது இந்திய தூதரகம். அவசர உதவிக்கு phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொது மக்களை காத்திட களத்தில் இறங்கிய M L A ! கலெக்டரிடம் மனு!