நாகார்ஜுனாவின் 100வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் ஏற்கனவே ரட்சகன், பயணம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் ஸ்டைலிஷான வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் நாகார்ஜுனா. இதற்கிடையில் தனுஷின் ‘குபேரா’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நாகார்ஜுனாவின் 100வது படத்தை பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் இயக்குனர் ரா. கார்த்திக் தான் நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்க உள்ளாராம். இதனை நாகார்ஜுனாவே பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் இந்த படமானது ஆக்சன் கலந்த பேமிலி சென்டிமென்ட் படமாக இருக்கும் என்றும் ‘கூலி’ படம் ரிலீஸாகி இருக்கும் நிலையில் தன்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது என்றும் அப்டேட் கொடுத்துள்ளார். இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.