ராகவாலாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ருத்ரன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கதிரேசன், கதையாசிரியர் திருமாறன், நடிகர் இளவரசு ஆகியோர் கலந்து கொண்டு அங்குள்ள முதியோர்களுக்கு அரிசி,பருப்பு, வேட்டி,நைட்டி மற்றும் துண்டு வழங்கினர்.பிருந்தாவனம்
மேலும் முதியோர் இல்லத்திற்கு நிதியாக 1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.பின்னர் அங்குள்ள முதியோர்கள் திரைப்படத்தை காண நாளை பிரத்தியேகமாக முதியோர் இல்லத்தில் திரையிடப்படவுள்ளது.
இது குறித்து படக்குழுவினர் செய்தியாளரர்களிடம் கூறுகையில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.சமூகத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்களை மையமாக கொண்டு தான் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்