spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமீன்பிடிக்க வெடி வீசியதில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

மீன்பிடிக்க வெடி வீசியதில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

-

- Advertisement -

மீன்பிடிக்க வெடி வீசியதில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வெடி மருந்து தோட்டாவை வீசியபோது அங்கு குளித்துக் கொண்டிருந்த மோகன் குமார் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

fishing

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீனவர்கள் வெடி மருந்து தோட்டாவை வீசி உயிரிழந்து தண்ணீரில் மிதக்கும் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருவது வழக்கம். இதனிடையே நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேர்ந்த வாலிபர்கள் மோகன்குமார் மற்றும் பூபதி ஆகிய இருவரும் ஆணை புலிகாடு பகுதியிலுள்ள தனது உறவினர் மாதையன் என்பவரின் வீட்டிற்கு வந்தவர்கள், அதே பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர்.

we-r-hiring

அப்போது மீன் பிடிப்பதற்காக அங்கு வந்த பெருமாள் என்பவர் வெடி மருந்து தோட்டாவை காவிரி ஆற்றில் வீசியபோது தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த மோகன்குமார் வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாறை மீது நின்றுக்கொண்டிருந்த பூபதி தனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்ததையடுத்து உடனடியாக பூலாம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வெடிமருந்து தோட்டாவை வீசிய பெருமாளிடம் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடிப்பதற்காக போடப்பட்ட வெடிமருந்து தோட்டாவில் வாலிபர் ஒருவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ