spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

-

- Advertisement -

தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் என தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்இதுதொடா்பாக தனது வலைத்தளப்பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.

புதல்வராகவும், திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன்.

we-r-hiring

பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறன் அவர்களது “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார்.

தமிழ் திரையுலகின் பாதையை தீர்மானித்ததில் ஏவிஎம் நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ? அந்த அளவு ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது.

அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்“ என தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

வயது மூப்பு காரணமாக ஏ.வி.எம் சரவணன் காலமானார்!!

MUST READ