புதுச்சேரியில் விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த தவெக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வருவோரை போலீசார் சோதனை செய்தபோது, துப்பாக்கியுடன் வந்த நபர் பிடிப்பட்டுள்ளாா். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சிவகங்கையை சேர்ந்த தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த தவெக நிர்வாகி யார்? சட்டவிரோதமாக துப்பாக்கியை பெற்றது எப்படி என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற நபரின் போட்டோ வெளியாகியுள்ளது.
70 இடங்களில் தவெக வெற்றி! கருத்துக்கணிப்பின் ரகசிய பின்னணி! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!


