spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு6000 ஆயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இயங்கும் "தூங்க நகரம்" – மதுரை!

6000 ஆயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இயங்கும் “தூங்க நகரம்” – மதுரை!

-

- Advertisement -

உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? “The World’s only living civilization” என்ற பெருமையை பெற்ற நகரம் எது என்பது குறித்து இப்பதிவில் காணலாம்.6000 ஆயிரம் ஆண்டுகளாக  உயிர்ப்புடன் இயங்கும் "தூங்க நகரம்" – மதுரை!உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரிய வந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.

ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் “மதுரை “தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.

we-r-hiring

நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை “The World’s only living civilization” என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் “The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ் மதுரையை வர்ணித்துள்ளாா்.

மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.

இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக வழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.

ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?6000 ஆயிரம் ஆண்டுகளாக  உயிர்ப்புடன் இயங்கும் "தூங்க நகரம்" – மதுரை!

மதுரைக்கு வழங்கப்படும் “தூங்கா நகரம்” என்ற பெயர், சமீப காலங்களில் உருவான ஒன்றல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மதுரையில் இரவு நேர வர்த்தகம் பிரசித்தமாக இருந்தது. அக்காலத்தில் இரவில் இயங்கிய கடைகளை “அல் அங்காடி” என்று அழைத்தனர்.

இரவு முழுவதும் இயங்கிய சந்தைகள் மற்றும் நகரின் தொடர்ச்சியான செயல்பாடுகளே, மதுரைக்கு “தூங்கா நகரம்” என்ற அடையாளத்தை வரலாற்றிலேயே நிலைநிறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆறாயிரம் ஆண்டுகளாக, ஒரு நகரமாக மட்டுமல்லாது, ஒரு நாகரீகத்தின் கலையும், கலாச்சாரமும், மொழியும் சுமந்து, இடைவெளியின்றி உயிர்ப்புடன் இயங்கி வரும் நகரம் மதுரை மட்டுமே என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கே பெருமை சேர்க்கும் உண்மை.

காலத்தை வென்று நிற்கும் இந்த “தூங்கா நகரம்” – மதுரை, மனித நாகரீக வரலாற்றின் உயிரோட்டமான சாட்சியாக தொடர்ந்து திகழ்கிறது!

15 ஆண்டு கால தேடல்… தலைமுறைகளைக் கடந்து நம் வரலாற்றை பறைசாற்றும் “பொருநை அருங்காட்சியத்தின் வரலாற்று பயணம்…

MUST READ