- Advertisement -
ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து புக்கெட் தீவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது வேகமாக விமானம் தரையில் மோதியதில் முன்பக்க டயர் பெரும் சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் ஓடுபாதையை விட்டு விலகியது.
விமானிகளின் சாதுரியத்தால் விமானத்திலிருந்து 135 பேர் பெரும் ஆபத்திலிருந்து தப்பித்தனர். விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஏர் இந்தியா நிறவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விபத்தை அடுத்து புகெட் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கடற்படை பலத்தை நிரூபிக்க வடகொரியா அதிரடி: புதிய போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!

