spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பொய்களை கட்டவிழ்க்கும் பாஜக- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொய்களை கட்டவிழ்க்கும் பாஜக- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

பொய்களை கட்டவிழ்க்கும் பாஜக- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உங்களில் ஒருவன் தொடரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று உள்துறை அமைச்சரே பேசியிருக்கிறாரே? முஸ்லீம்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ஒதுக்கீடு வழங்கிய கட்சியின் தலைவராக உங்கள் கருத்து என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிறுபான்மைச் சமூகத்தினர் மீதான வன்மம்தான் இதன் மூலமாக வெளிப்படுகிறது. தேர்தல் அரசியல் லாபங்களுக்காக உள்துறை அமைச்சர் இவ்வாறு சொல்லி இருக்கிறார். இசுலாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திப்படுத்தும் என்று பா.ஜ.க.-வினுடைய தலைமை அவர்களாவே கற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மை அப்படியில்லை. பா.ஜ.க.-விற்கு வாக்களிக்காத பெரும்பான்மையான மக்களும் இந்துக்கள்தான்.

ஆனால் அவர்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புகிற மக்கள். பா.ஜ.க. தன்னுடைய வெறுப்புணர்ச்சியை குறிப்பிட்ட சிலரிடம் திணித்து, அதுதான் ஒட்டுமொத்த மக்களுடைய மனநிலை என்று காட்ட நினைக்கிறது. அதற்கு துணையாக இருக்குறது பொய்களையும், கற்பனைக் கதைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற பரப்புரை இயந்திரமாக சமூக ஊடகங்களில் செயல்படுகிற பா.ஜ.க ஆதரவு கணக்குகள்.

we-r-hiring

பா.ஜ.க.-வினுடைய ஊதுகுழலாக மாறி, ஜனநாயகத்தினுடைய நான்காவது தூண் என்பதை மறந்து, பா.ஜ.க.-வை தாங்கி பிடிக்கிற சில ஊடகங்கள். இப்படி பல காரணிகள் மூலம் தன்னுடைய வெறுப்பரசியலை பா.ஜ.க. செய்துகொண்டு இருக்கிறது. மதச்சார்பின்மையை அரசியலமைப்பு நெறிமுறையாக கொண்ட நாட்டில், உள்துறை அமைச்சரே இவ்வாறு பேசுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிற செயல்! மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்! கோயபல்ஸினுடைய பொய்கள் நாஜிகளுக்கு. ஆனால், உண்மை, மக்களுக்கு! இதுதான் வரலாறு சொல்கின்ற பாடம்! நாங்கள் மக்களை நம்புகிறோம்! இந்திய மக்களுடைய மனசாட்சி என்றைக்கும் உறங்கிவிடாது என்று நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

MUST READ