HomeBreaking News"அவர் ஏன் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை?" - அமித் ஷாவை நேரடியாக சாடிய அபிஷேக் பானர்ஜி!

“அவர் ஏன் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை?” – அமித் ஷாவை நேரடியாக சாடிய அபிஷேக் பானர்ஜி!

-

- Advertisement -

புது தில்லி:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வராமல் தவிர்த்து வருகிறார் என்றும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்ள பயப்படுகிறார் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

we-r-hiring

அபிஷேக் பானர்ஜி, அமித் ஷா

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் அதிரடி நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அபிஷேக் பானர்ஜி இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“எனக்கு தைரியம் இருக்கும்போது அவருக்கு ஏன் இல்லை?”

செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் பானர்ஜி தெரிவித்ததாவது:

“மத்திய உள்துறை அமைச்சருக்குப் புரியவையுங்கள். அவர் ஏன் நாடாளுமன்றத்திற்கு வர மறுக்கிறார்? நான் மன்றத்திற்கு வரும்போது, அவர் ஏன் வரக்கூடாது?”

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், உள்துறை அமைச்சர் அவையைத் தவிர்த்து ஓடுவது அவர் உள்ளுக்குள் பயந்திருப்பதையே காட்டுகிறது. டெல்லி காவல்துறையின் தடிப்படி நடவடிக்கை தன் உத்தரவின் பேரில் நடைபெற்றது தவறானது என்பது அவருக்குத் தெரியும்; அதனால் தான் அவரிடம் எந்தப் பதிலும் இல்லை.

தொகுதி மறுவரையறை மசோதா 2026: தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஆதரவு!

இதே சந்திப்பில், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு (Delimitation Bill, 2026) எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அபிஷேக் பானர்ஜி முழுமையாக ஆதரித்துப் பேசினார்:

  • சரியான நடவடிக்கை: தமிழ்நாடு சட்டமன்றம் மிகச் சரியான முடிவை எடுத்துள்ளது.

  • ஜனநாயகத்திற்கு ஆபத்து: எல்லைகளையும் மாவட்டங்களையும் மாற்றியமைக்கும் இந்தத் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பையே பலவீனப்படுத்தும் என்று தெரிவித்தார்

மாநில பெயர் மாற்ற மசோதா நிறைவேற்றம்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’!

MUST READ