- Advertisement -
தமிழகத்தில் நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள்:
மதுராந்தகம் தொகுதி: தவெக தேர்தல் பொறுப்பாளராக ஆதவ் அர்ஜூனா நியமிக்கப்பட்டுள்ளார்.
தாராபுரம் தொகுதி: தவெக தேர்தல் பொறுப்பாளராக அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைத்தேர்தல் பணிகளை விரைவுபடுத்தவும், தேர்தல் கள உத்திகளை வகுக்கவும், தொகுதி அளவில் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வெற்றிக்காகப் பணியாற்றவும் இந்த தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
