தாம்பரம் அருகே வாலிபர் வெட்டி கொலை!
சென்னையில் தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான பல்லு என்கிற பாலாஜி நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார்கள்,

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த பாலாஜியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலாஜி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை! ஆலம்பாளையத்தில் பெரும் சோகம்
பாலாஜியின் உடலைக் கைப்பற்றிய பீர்க்கன்காரனை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரணையில் பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதென்றும், மேலும் இந்நிலையில் கஞ்சா விற்பனை செய்து வந்ததால் முன் பகை காரணமாக கொலை செய்யபட்டாரா என்றும் பலக் கோணத்தில் பீர்க்கன்காரனை போலிசார் விசாரித்து வருகின்றார்கள்.
