சூரி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சூரி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக சூரி பல படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் பல சர்வதேச விருதுகளை அள்ளிய பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கு “கொட்டுக்காளி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கொட்டுக் காளி படத்தின் படப்பிடிப்பு முழிவதுமாக நிறைவடைந்துள்ளது. படக்குழுவினர் கேக் வெட்டி இதைக் கொண்டாடியுள்ளனர். மேலும் சிவகார்த்திகேயன் உடன் படக்குழுவினர் காணப்படும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை சிவகார்த்
திகேயனின்
சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர். தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் படங்களைத் தயாரித்து வருகிறார். ‘கனா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக தன் பயணத்தைத் துவங்கிய சிவகார்த்திகேயன் தற்போது அருமையான படங்களை கொடுத்து வருகிறார்.


