Homeசெய்திகள்இந்தியா"எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்"- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு!

“எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்”- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு!

-

- Advertisement -

 

"எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்"- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு!
Photo: ANI

வரும் மே 28- ஆம் தேதி அன்று மதியம் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும் என்று கோரியுள்ள காங்கிரஸ், தி.மு.க., வி.சி.க, ம.தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, உத்தவ் சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

காவல்துறையில் காவி மயத்துக்கு இடமில்லை! துணை முதல்வர் எச்சரிக்கை

அத்துடன், எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் நசுக்கப்படும் போது, புதிய கட்டிடத்துக்கு அனுமதி இல்லை. குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் இயங்காது என்ற போதும், அவருக்கு அழைப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் வைக்கவுள்ளார். கடந்த 1947- ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது, நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. நாடாளுமன்றத் திறப்பு விழாவை அரசியலாக்க விரும்பவில்லை; மக்களே முடிவு செய்துக் கொள்ளட்டும். நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்ட 7,000 பணியாளர்களை பிரதமர் கௌரவிக்கவுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சாலை விபத்து – 7 பேர் பலி

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும். புறக்கணிக்கும் தங்கள் முடிவை எதிர்க்கட்சிகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். வரலாற்று சிறப்பு வாய்ந்தத் தருணத்தை அரசியலாக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ