spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்

-

- Advertisement -

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

lorry

லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லை என்று சொல்லி மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர். கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லை என புகார் எழுந்துள்ளது.

we-r-hiring

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மெட்ரோ குடிநீர் அதிகாரிகள், “போரூர் அருகே குழாய் இணைப்புப் பணிகள் நடைபெறுவதால் தண்ணீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் சீராக தண்ணீர் வழங்கப்படும்” எனக் கூறியுள்ளனர்.

MUST READ