Homeசெய்திகள்சினிமாகிங் ஆஃப் கோத்தா படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த ஐஸ்வர்யா லக்ஷ்மி!

கிங் ஆஃப் கோத்தா படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த ஐஸ்வர்யா லக்ஷ்மி!

-

- Advertisement -

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ள துல்கர் சல்மான் சீதாராமம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அபிலாஷ் ஜோசி இயக்கியுள்ளார். இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ரித்திகா சிங் பிரசன்னா, அனிகா சுரேந்திரன், சபீர் கல்லாரக்கல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேஃப்பரர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இப்படம் மலையாளத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரகுமான் இணைந்து இசை அமைத்துள்ளனர்.இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  இந்த படத்தின் டிரைலர், ஃபர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ