ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருதை பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸ் பெற்றுள்ளார்.
ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்து வெளியான திரைப்படம் 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த பெரும் மலையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் டோவினோ தாமஸ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றது மட்டும் அல்லாமல் மலையாள சினிமாவிலேயே குறுகிய காலத்தில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் சமீபத்தில் 2018 எவ்ரிஒன் இஸ் எ ஹீரோ திரைப்படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற செப்டிமியஸ் விருது வழங்கும் விழாவில் டோவினோ தாமஸ்க்கு 2018 படத்திற்காக ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் டோவினோ தாமசின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.