தங்கலான் படத்தில் தனக்கு வசனமே இல்லை – விக்ரம்
- Advertisement -

விக்ரம்,பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார்.
இப்படம் கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு ஏற்பட்ட விபத்தினால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் சில வாரங்கள் கழித்து சென்னையில் தொடங்கப்பட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்திற்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் இசை வௌியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், பிதாமகன் படத்தைப் போல இப்படத்திலும் தனக்கு வசனமே இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.