spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பூஜை சென்னையில் முடிந்ததாக தகவல்

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பூஜை சென்னையில் முடிந்ததாக தகவல்

-

- Advertisement -
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பொதுவாக இப்படியான நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவில் நடிகர்களாகவே களமிறங்குவர். ஆனால் இதற்கு மாறாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், ஜேசனை கதாநாயகனாக வைத்து ஒரு கதை கூறியுள்ளார். அந்தக் கதை நன்றாக இருக்கிறது, அதில் நடிக்கலாம் என்று விஜயும் பரிந்துரை செய்துள்ளார். ஆனால் ஜேசன், தான் இயக்குனர் தான் ஆவேன் என்று உறுதியாக கூறிவிட்டாராம். இதனிடையே ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது

அதன்படி இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் கவின் நாயகனாக நடிப்பதாகவும், ஏ ஆர் ரஹ்மானின் மகன் இசை அமைப்பதாகவும் தகவல் வௌியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புக்கான பூஜை சென்னையில் நடைபெற்று முடிந்ததாக கூறப்படுகிறது. விரைவில் புகைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ