கடந்த ஆண்டு ரிஷப் செட்டி நடிப்பிலும், இயக்கத்திலும் வெளியான திரைப்படம் காந்தாரா. இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் இப்படம் பேசப்பட்டது. இந்தப் படத்தை கே ஜி எஃப் 1, கே ஜி எஃப் 2 படங்களை தயாரித்த கோம்பாலை ஃபிலிம் நிறுவனம் தயாரித்திருந்தது. கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் இந்தியா முழுவதும் 400 கோடி வசூல் செய்தது. மண் மற்றும் மக்களின் சமய நம்பிக்கையை மையமாக வைத்த கதைக்களத்தில் இப்பாடம் உருவாகி இருந்தது.
சமீபகாலமாக காந்தாரா 2 படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதன்படி காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தில் தொடர்கதையாக இல்லாமல் அதற்கும் முன் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் ரிஷப் ஷெட்டி, நிறைய ஆராய்ச்சிகளுக்கு பிறகு காந்தாரா 2 படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை முடித்துவிட்டாராம். மேலும், படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது.
படத்திற்கான பூஜை இன்று நடைபெறும் என்று படக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது. படத்தின் மற்ற நடிகர், நடிகை குறித்த தகவல்கள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காந்தாரா 2 திரைப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.