நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதைத் தொடர்ந்து நயன்தாரா மண்ணாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
அதேசமயம் நயன்தாராவின் கணவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐசி எனும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க கிருத்தி செட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ் ஜே சூர்யா இவர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசை அமைக்க இருக்கிறார்.
இந்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் ஏற்கனவே இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது நயன்தாரா நடிக்கவில்லை என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள எல்ஐசி படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நடிக்கவில்லை என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


