- Advertisement -
பரபரப்பான அம்பத்தூர் தொழிற்பேட்டை 3வது பிரதான சாலையில் அத்திப்பட்டு சிக்னல் அருகே தண்ணி லாரிக்கு எதிரே ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபர் தண்ணீர் லாரியின் பின் சக்கரத்தில் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கிரி மற்றும் தொழிற்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த அடுத்த நிமிடமே தண்ணீர் லாரியின் ஓட்டுனர் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.