நடிகர் ராம்சரண், ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இதில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, சுனில், ஜெயராம், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் ராம்சரண் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் இப்படம் 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடிகர் ராம்சரண் சமீபத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். அதன் பிறகு சங்கரை சந்தித்த ராம்சரண், கேம் சேஞ்சர் படத்தில் பிஜேபி மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான வசனங்களோ காட்சிகளோ இருக்கக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறியுள்ளாராம். அது மட்டும் இல்லாமல் பாராளுமன்ற தேர்தல் நடக்கும் சமயத்தில் ஏதேனும் முக்கியமான சம்பவங்கள் நடந்தால் அதை கேம் சேஞ்சர் படத்தில் இணைக்க வேண்டும். அப்பொழுது தான் இப்படம் மக்களை வெகுவாக கவரும். ஆதலால் பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் இது சம்பந்தமான காட்சிகளை படமாக்க 5 நாட்களாவது கால்ஷீட் தர வேண்டும் என்று இயக்குனர் சங்கர், ராம் சரணிடம் கூறியுள்ளாராம். எனவே இயக்குனர் சங்கர், ராம்சரண் ஆகியோர் பக்காவாக பிளான் போட்டு கேம் சேஞ்சர் படத்தை களமிறக்க இருக்கிறார்கள் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.