spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதேர்தல் பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்தத் தடை!

தேர்தல் பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்தத் தடை!

-

- Advertisement -

 

வயநாடு தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தம்!
File Photo

குழந்தைகளைத் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

we-r-hiring

ஆந்திராவில் வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், “மக்களவைத் தேர்தல் பரப்புரையில் குழந்தைகளை பயன்படுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்றால் அது தேர்தல் விதிமீறல் இல்லை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறும் அரசியல் கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

மணிகண்டனின் லவ்வர் திரைப்படம்… 18 கெட்ட வார்த்தைகள் நீக்கம்…

மக்களவைத் தேர்தல் தேதி இம்மாதம் வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் இத்தகைய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

MUST READ