
மத்திய அரசின் மலிவு விலையில் விற்பனை செய்யும் ‘பாரத் அரிசி’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
மாயமான வெற்றி துரை சாமி – களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
இந்தியாவில் ஒருபக்கம் பருவமழை பொய்த்துப் போனதாலும், மறுபக்கம் கனமழை, வெள்ளம் காரணமாக நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் அரிசி விலை வெளிச்சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் சாமானிய மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், ‘பாரத் அரிசி’ விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, பாரத் அரிசி ஒரு கிலோ ரூபாய் 29- க்கு விற்பனை செய்யப்படுகிறது; ஐந்து மற்றும் பத்து கிலோ பாக்கெட்டுகளில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.
திமுகவின் போலி சமுகநீதி மக்களவையில் இன்று வெளிப்பட்டது – எல்.முருகன்
தேசிய வேளாண் கூட்டுறவுச் சங்கம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் சில்லறை விலையில் பாரத் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் இணையதளங்கள் மூலம் பாரத் அரிசி விற்பனை செய்யப்படவுள்ளது.