Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் அவருக்குள்ள மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவில்லை - அமைச்சர் ரகுபதி பேட்டி!

ஆளுநர் அவருக்குள்ள மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவில்லை – அமைச்சர் ரகுபதி பேட்டி!

-

- Advertisement -

'லியோ' பட சிறப்பு காட்சி விவகாரம்- அமைச்சர் ரகுபதி விளக்கம்!

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு எழுதி கொடுத்த உரையில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார். தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவையில் இருந்து தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே கிளம்பினார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு எழுதி கொடுத்த உரையில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவரது சொந்த கருத்துகளை மட்டுமே பேசினார். ஆளுநர் உரையில் ஏதேனும் சந்தேகம் இருந்து இருந்தால் கேட்டு தெளிவு பெற்று இருக்கலாம். நாங்கள் மரியாதையோடு அழைத்தோம். ஆனால் அந்த மரியாதையை அவர்கள் காப்பாற்றி கொள்ளவில்லை. சாதகமான சூழல் இல்லாத போதும், முதலமைச்சர் ஆளுநரோடு அனுசரித்து போக தான் நினைத்தார் என கூறினார்.

MUST READ