Homeசெய்திகள்தமிழ்நாடுசீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கை பூப்பறித்துக்கொண்டிருக்குமா? சேகர்பாபு

சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கை பூப்பறித்துக்கொண்டிருக்குமா? சேகர்பாபு

-

- Advertisement -

சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

sekar babu press meet

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் இந்து அறநிலை துறையின் சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைத்தல் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். ராஜகோபுரம், சுற்றுப்பிராகாரம், கருங்கல் பதிக்கும் பணிகள், மின் பணிகள் நந்தவனம் சீரமைத்தல் முதலான பணிகளை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

we-r-hiring

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ரூ.6.30 கோடி செலவில் தங்கத்தேர் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தங்கத்தேர்க்கான மரத்தேர் பணிகள் 31 லட்ச ரூபாய் செலவில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு மாத காலத்திற்குள் மரத்தேர் பணி நிறைவடைந்து, தங்கத்தேர் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த திருக்கோவிலுடைய குளம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றது. மேலும், ஒரு கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் 5 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு உண்டான திருப்பணிகள் அடுத்த எட்டு மாதங்களுக்குள்ளாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். திமுக ஆட்சியில் தான் உபயதாரர்கள் மனமுவந்து தரும் தொகை முழுமையாக திருக்கோவிலுக்கு செய்யப்படும் என நம்பிக்கை வந்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திருக்கோவில்களுக்கு உபயதாரர்கள் மூலமாக 600 கோடி ரூபாய் வரை நன்கொடை வந்துள்ளது.

Home

தைப்பூசத்தை முன்னிட்டு சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் பழனியில் நாள்தோறும் பத்தாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கலைஞரின் நினைவாக மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்கப்பட்டால் உடைப்பேன் என சீமான் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில் ஆவேசப்பட்டார். அவர் சின்னத்தை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூ பறித்துக்கொண்டிருக்குமா” என கேள்வி எழுப்பினார்.

MUST READ