Homeசெய்திகள்தமிழ்நாடுதக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

-

- Advertisement -

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல் இது குறித்து அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

QR கோடு லிங்கில் ஆங்கில பாடல் சர்ச்சை – CBSE அதிரடி விளக்கம்..

we-r-hiring

MUST READ