
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டங்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிடுக்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

சீர் மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்க முதலமைச்சர் உத்தரவு!
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 22 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. அதன்படி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
விஷ்வகுருவான பிரதமர் மவுனகுருவானது ஏன்? – முதலமைச்சர் கேள்வி
இதனால் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் புதிய திட்டங்களுக்கு நிதியை செலவிடக் கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் நிறைவடைந்த திட்டங்களுக்கு மட்டுமே நிதி வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.


