வாழைப்பழங்களிலேயே சிறந்த பழம் செவ்வாழைப்பழம். இதை நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. அதே சமயம் இந்த செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், குழந்தையின்மை பிரச்சனை குணமாகும். மேலும் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர நல்ல தீர்வை விரைவில் காண முடியும்.
அது மட்டும் இல்லாமல் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக கண் பார்வை குறைய ஆரம்பிக்கும் சமயத்திலேயே இதை சாப்பிட தொடங்குவது மிகவும் நல்லது. இது உங்கள் பார்வையை தெளிவாக்க உதவுகிறது.

இவ்வாறு அற்புத குணங்கள் கொண்ட செவ்வாழைப்பழத்தை சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா?
அதாவது செவ்வாழைப்பழத்தை காலை 6 மணிக்கு சாப்பிடுவது மிகவும் சிறந்தது. அப்படி இல்லை என்றால் பகலில் 11 மணியிலிருந்து மாலை நான்கு மணிக்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும். நீங்கள் உணவு உண்ட பின் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டால் அது மந்த தன்மையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அதில் உள்ள சத்துக்களும் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு. எனவே உணவு சாப்பிடுவதற்கு இடைப்பட்ட நேரத்தில் செவ்வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
இருப்பினும் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.