spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தது தி.மு.க."- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

“ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தது தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தது தி.மு.க."- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

we-r-hiring

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு நிலம் கொடுத்தது தி.மு.க. என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் புத்தாண்டில் ‘கங்குவா’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சிலர் கட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் கூட நிரம்பவில்லை; ஆனால் அ.தி.மு.க.வை அழிக்கப் பார்க்கிறார்கள். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தது தான் வரலாறு.

அ.தி.மு.க. பற்றி யார் பேசினாலும் இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு நிலம் கொடுத்தது தி.மு.க. தி.மு.க. ஆட்சியில் பல துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் பச்சை பொய் கூறி வருகிறார். தமிழகத்தில் 3 ஆண்டுகள் குடும்ப ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது.

விசில் போடு….. இளைஞர்களை குத்தாட்டம் போட வைக்கும் ‘கோட்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ