spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"அனைத்தையும் காவிமயமாக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

“அனைத்தையும் காவிமயமாக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

MKStalin

we-r-hiring

“உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசினார்கள்” என்று தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்ச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

பொதிகை தொலைக்காட்சியின் இலச்சினை நிறம் மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;

டி20 உலகக்கோப்பைக்கு 100% தயார்- கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது தூர்தர்சன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்! தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பா.ஜ.க. சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ