
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
கோடை விடுமுறையையொட்டி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பை கவனத்தில் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது குறைக்கப்படுவதுடன் சுற்றுலா வருவோரும் மன நிம்மதியுடன் தங்களது விடுமுறையைக் கழிக்க முடியும் என சுற்றுலா பயணிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், “இ-பாஸ் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை இ-பாஸ் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். போதிய கட்டமைப்பு இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
தேவகவுடா மகன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு!
நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தவுடன் இ-பாஸ் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.