- Advertisement -
சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவர் புகைப்பட கலைஞர் ஆவார். பணி நிமித்தமாக ஸ்ரீபெரும்புதூர் சென்று வீடு திரும்பியபோது செம்பரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பாலாஜி முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.

அதில் வேகமாக வந்த பாலாஜி முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்து புரண்டு சென்று சுயநினைவை இழந்துள்ளார். விழுந்து கிடந்தவரை சக வாகன ஓட்டிகள் மீட்டு முதலுதவி அளித்து 108 ஆம்புலன்ஸில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


