ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குண்டூர் ஸ்ரீநகரில் உள்ள பொருகடா அனில் என்பவர் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவராக உள்ளார். கட்சி பணிகளுக்காக அதே பகுதியில் அலுவலகம் அமைத்து தனது பணிகளை செய்து வந்தார்.
தேர்தலின் போதும் அதற்கு முன்பும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் சந்திரபாபு, அமைச்சர் பவன் கல்யாண் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரது அலுவலகத்திற்கு சிலர் தீ வைத்தனர்.
பட்டாபிராம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நன்னீராட்டு பெருவிழா
இந்நிலையில் நேற்றும் அவரது அலுவலகம் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.