spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாட்டை துரைமுருகன் விடுவிப்பு

சாட்டை துரைமுருகன் விடுவிப்பு

-

- Advertisement -

தமிழக அரசு மற்றும் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் விடுவிக்கப்பட்டார்.

we-r-hiring

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அபிநயா போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கல்லக்குடி கொண்ட கருணாநிதி சண்டாளன் கருணாநிதி என்ற பாடியும் தமிழக அரசு குறித்து அவதூறாகவும் பேசியுள்ளார். இந்த செயலானது திமுகவினரிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக சாட்டை துரைமுருகன் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரை முருகனை விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சாட்டை துரைமுருகன், திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நீதிமன்ற காவலுக்கு அனுப்ப தேவையில்லை என உத்தரவு பிறப்பித்தார்.

 

 

 

 

MUST READ