HomeBreaking Newsநீட் விவகாரத்தில் அதிரும் நாடாளுமன்றம்: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் 12 மணி வரை ஒத்திவைப்பு!

நீட் விவகாரத்தில் அதிரும் நாடாளுமன்றம்: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் 12 மணி வரை ஒத்திவைப்பு!

-

- Advertisement -

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கடும் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 5-வது நாளாக இன்றைக்கும் முடங்கின.

நீட்

we-r-hiring

இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராகத் தீவிர கோஷங்களை எழுப்பினர். மக்களவையில் அமளி நீடித்ததால், அவை கூடிய 3 நிமிடங்களிலேயே நண்பகல் 12 மணி வரை மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையிலும் அமளி

இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீட் விவகாரத்தை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்திச் முழக்கமிட்டனர்.

அவையில் நிலவிய கூச்சலும் குழப்பமும் அடங்காததால், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவை நடவடிக்கைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இரு அவைகளும் அடுத்தடுத்து முடங்கியுள்ளதால், டெல்லி அரசியல் களம் பெரும் பரபரப்பில் மூழ்கியுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு – தார்மீக பொறுப்பேற்க மறுக்கும் அமைச்சர் தர்மேந்திரா பிரதான்

MUST READ