பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு பின்னர் பாஜக மாநில தலைவர் மாற்றப்படுவது உறுதி என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் அண்ணாமலை, தாமே அந்த பதவியை வேண்டாம் என்று சொல்வது போன்று உள்ளது. ஆனால் உண்மையில் பாஜக தலைமை தான் அவரை தூக்கி வீசியுள்ளது. அண்ணாமலையுடைய பரிச்சார்த்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன.
வரும் 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழக வருகை முடிந்த உடன் அண்ணாமலை பதவியில் இருக்க மாட்டார். இல்லாவிட்டால் நயினார் நாகேந்திரன் அல்லது தமிழிசை இருப்பார்கள். அப்படியும் இல்லாத பட்சத்தில் தமிழக பாஜகவை வழிநடத்த ஒரு கமிட்டி அமைக்கப்படும். அந்த கமிட்டியில் ஹெச்.ராஜா இருக்க மாட்டார். அண்ணாமலை லண்டன் சென்றபோது அமைக்கப்பட்டது போல, தற்போதும் அமைக்கப்படலாம். நிறைய பேர் தலைவர் பதவிக்கு முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் அண்ணாமலை ஆதரவாக தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்க ஒட்டுகிறார்கள். அண்ணாமலை வார் ரூம் வைத்து தனக்கு எதிரானவர்கள் குறித்து அவதூறுகளை பரப்பி வந்தார்.

அரவக்குறிச்சியில் தேர்தலில் போட்டியிட்டபோது, பாஜக தரப்பில் செலவுக்கு கொடுத்த பணத்தை வைத்து அண்ணாமலையார் பிரிக்ஸ் என்ற செங்கல் சூளையை தொடங்கினார். அண்மையில் கோவையில் நிலாம்பூர் செல்லும் சாலையில் பல கோடி மதிப்பிலான நிலத்தை தனது மனைவியின் பெயரில் அண்ணாமலை வாங்கினார். மணல் குவாரிகளில் சோதனை நடத்தி, லண்டனில் சென்று மணல் கொள்ளையரிடம் 300 கோடி வாங்கினார். அதேபோல், கோவையில் மக்களவை தேர்தல் செலவுக்காகவும் மணல் கொள்ளையர்களிடம் பணம் பெற்றுள்ளார். இன்று வரை மணல் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையில் யார் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. அத்துடன் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போது செந்தில்பாலாஜியை கைதுசெய்தால் தான் கொங்கு பகுதியில் வெல்வோம் என்று அண்ணாமலை சொன்னார். அதனால்தான் அமித்ஷா, அமலாக்கத்துறை மூலமாக செந்தில்பாலாஜியை கைது செய்தார். ஆனால் 25 தொகுதிகளிலும் பாஜக மொத்தமாக காலியானது.
திருச்சியை சேர்ந்த செந்தில் என்பவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய தென்னிந்திய பிரமுகராக உள்ளார். இவர் ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இந்த செந்தில் மற்றும் பி.எல். சந்தோஷ் என்பரும் சேர்ந்துதான் அண்ணாமலையை கொண்டுவந்து, எல்லாம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய நிலவரப்படி அந்த பி.எல்.சந்தோஷே ஆளை விடுங்க என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் பாஜகவில் தலைவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களையே அமைதியாக்கினார்கள். யாரும் எதிர்த்து பேசவில்லை. ஆனால் அண்ணாமலை எதித்து குரல் கொடுக்கிறார். கட்சியில் இருந்து அண்ணாமலையை நீக்கினால் அடுத்த நாளே புதிய கட்சியை தொடங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
அதிமுக தலைவர்களை அண்ணாமலை அவதூறாக பேசியதால், அவரை நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானமே போட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் மகன் வழக்கில் சிக்கியதை வைத்து தான், எடப்பாடி பழனிசாமியை பாஜக கூட்டணிக்கு அழைத்துச் செல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அப்படி கூட்டணிக்கு செல்கிறபோது, அவர் வைத்த நிபந்தனைகளில் ஒன்றுதான் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பது. இதனால் அண்ணாமலை கலக்காரராக மாறி, தனிக்கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவதால் தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று அண்ணாமலை கேட்டார். ஆனால் பாஜக மேலிடம் அவருக்கு பறுப்பு வழங்க மறுத்து விட்டது. மத்திய அமைச்சராக பொறுப்பேற்றக் கொண்டு அங்கு சென்று, கூட்டணி கட்சிகள் குறித்து பேசினால் என்ன ஆவது. அப்படி அண்ணாமலை மத்திய அமைச்சராக வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி 2 மாநிலங்களவை எம்.பி பதவிகளில் ஒன்றை விட்டுத்தர வேண்டும். மேலும் அவருக்கு முன்னதாக எம்.பி ஆன ஜி.கே.வாசன் உள்ளார். அதனால் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு இல்லை. தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வேண்டுமென்றால் வழங்கப்படலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.