Homeசெய்திகள்கட்டுரைராமதாஸ் பேட்டியை தடுத்து நிறுத்திய பாஜக! அன்புமணிக்கு அமித்ஷா போட்ட கட்டளை!

ராமதாஸ் பேட்டியை தடுத்து நிறுத்திய பாஜக! அன்புமணிக்கு அமித்ஷா போட்ட கட்டளை!

-

- Advertisement -

பாமக நிறுவனர் ராமதாஸ், பிரபல செய்தி தொலைக் காட்சிகளுக்கு அளித்த பேட்டியை பாஜக உதவியுடன் அன்புமணி தடுத்துநிறுத்தி விட்டார். அதனால் அவர் செய்தியாளர் சந்திப்பின் மூலம் நேரலையில் அன்புமணி மீதான தனது குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராமதாசின் நேர்காணலின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- மருத்துவர் ராமதாசின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பு என்பது ஒரு தலைவனின் ஆற்றாமையைத் தான் வெளிப்படுத்தியுள்ளது. நக்சல் அமைப்பினரின் ஆதரவோடு தொடங்கப்பட்ட அரசியல் இயக்கம் பாமக. அது தியாகத்திற்கும், போராட்டத்திற்கும் பெயர் பெற்ற அமைப்பாகும். பாமகவை ஒரு சாதிய அமைப்பாக குறுக்கியது மிகவும் மோசமான விஷயமாகும். பாமகவின் சட்ட விதிகளின் படி தலித் ஒருவர் தான் பொதுச் செயலாளர் ஆகவும், இஸ்லாமியர் தான் பொருளாளராகவும் இருக்க முடியும். நக்சலிசத்தை குறுக்கி சாதியவாதமாக கொண்டு செல்கின்றனர். இப்படி பரிணாம வளர்ச்சி பெறுகிறபோது வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆகின்றனர். அதற்கான பலன்கள் எல்லாவற்றையும் தலித் ஏழுமலை கொஞ்சம் நாள் அனுபவித்தார். அதன்பிறகு முழுமையான அனுபவித்தது அன்புமணி ராமதாஸ். நக்சலிச கட்சியாக தொடங்கி, சாதி கட்சியாக வளர்ந்து, குடும்ப கட்சியாக பாமக மாறிவிட்டது. இன்றைக்கு கட்சி இரண்டாக உடைந்து விட்டது. இனி அதை ஒட்டவே முடியாது.

பாமகவை சேர்ந்த ஏ.கே. மூர்த்தி, வேலு போன்றவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர்களாக இருந்தார்கள். என்றைக்கு அன்புமணியை, மத்திய அமைச்சர் ஆக்கினார்களோ அன்றைக்கே குடும்ப கட்சியாகிவிட்டது. பின்னர் அன்புமணிக்கு, தலைவர் பதவியை கொடுத்தார்கள். இவை எல்லாம் மருத்துவர் ராமதாஸ் ஒப்புதலோடு தான் நடைபெற்றது. இன்றைக்கு அன்புமணியை எதிர்க்க காரணம் கடைசியில் ராமதாசையே தூக்கி தூரபோட்டு விட்டார்கள் என்பதால் தான். இன்றைக்கு பாமக இரண்டாக உடைக்கப்பட்டதை ராமதாஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அன்புமணி உடனான பிரச்சினை குறித்து மருத்துவர் ராமதாஸ்  2 செய்தி தொலைக் காட்சிகளுக்கு பேட்டி அளித்தார். ஆனால் அன்புமணி, அமித்ஷா மூலம் டிராய் அமைப்பின் மூலம் 2 தொலைக்காட்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்து பேட்டி வெளி வராமல் தடுத்துவிட்டார். தொலைக்காட்சி பேட்டிகளில் என்ன என்ன பேசி இருந்தாரோ. எவற்றை எல்லாம் இவர்கள் ஒளிபரப்பாமல் தடுத்து நிறுத்தினார்களோ. அவற்றை எல்லாம் செய்தியாளர் சந்திப்பில் நேரலையில் பேசிவிட்டார். இதுதான் ராமதாஸ். 2 தொலைக்காட்சி நிறுவனங்கள் எடுத்த பேட்டியை நிறுத்துகிற அளவிற்கு அன்புணிக்கு, பாஜகவின் முழுமையான ஆதரவு இருக்கிறது. இன்றைக்கு பாமக (ரா) அணி மற்றும் பாமக (அ) அணி என இரண்டாக பிரிந்துவிட்டது. எதிர்காலத்தில் பாமக(அ) அணி, பாஜகவோடு சேர்ந்துவிடும். அன்புமணி, மத்திய அமைச்சர் ஆகிவிடுவார்.

அதுவரை பாமக(ரா)- அணியை செயல் இழக்க செய்வதற்கு, பொதுக் குழுவை கூட்டுவார். இந்த பிரச்சினை தேர்தல் ஆணையத்திற்கு செல்லும். அங்கே பாமகவின் மாம்பழம் சின்னம், பாமக (அ) அணிக்கு ஒதுக்கப்படும். இதுதான் அவர்களின் திட்டம். இது வன்னியர்களின் வாக்குகளை பெறுதற்கான முயற்சியாகும். இதில் அன்புமணிக்கு பின்னடைவு என்ன என்றால் ராமதாசு சொன்னால்தான் வன்னியர்களின் வாக்குகள் விழும். அன்புமணிக்கு சுத்தமாக வாக்குகள் கிடையாது. அதனால் பாஜக கூட்டணியில் பாமக (அ) அணியை சேர்த்தாலும், வாக்குகள் கிடைக்காது. பாஜக கூட்டணிக்கு, வட தமிழகத்தில் பாமகவின் வாக்குகள் என்பது முழுமையாக கிடைக்காமல் போய்விடும்.

‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’-  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அன்புமணி உடன் மோதல் வந்த உடன் மருத்துவர் ராமதாஸ், முதலில் 34 அணிகளின் கூட்டத்தை தான் கூட்டினார். தற்போது பொதுக்குழு உறுப்பினர்களையும் தயார் செய்து கொண்டிருக்கிறார். அன்புமணி, தற்போது மாவட்ட ரீதியாக பொதுக்குழுவை கூட்டுவதாக சொல்கிறார். அதேவேளையில், ராமதாஸ் மாவட்ட செயலாளர்களை எல்லோரையும் மாற்றிக் கொண்டிருக்கிறார். பொதுக்குழு உறுப்பினர்களையும் மாற்றி, தன் கையில் எடுப்பார். இதன் மூலமாக, அன்புமணிக்கு கடும் போட்டியை கொடுப்பார். அந்த போட்டியில் அன்புமணி காணாமல் போய்விடுவார். அப்படி அன்புமணி தேர்தலில் நின்று, மாம்பழச் சின்னத்தை வாங்கினாலும் ராமதாஸ் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்வார். அப்படி செய்தால் பாஜக கூட்டணிக்கு வாக்குகள் வராது. இல்லாவிட்டால் இருவரையும் சேர்ப்பதற்கு பாஜக எப்படியாவது முயற்சிக்கும்.

மருத்துவர் ராமதாஸ் எதிர்பார்ப்பது என்பது, வன்னியர் அறக்கட்டளை மற்றும் அறக்கட்டளை சொத்துக்களில் அவருக்கும், அவரது மகள்களுக்கும் உரிய செல்வாக்கு ஆகியவற்றை தான். ராமதாசிடம் இருந்து மக்கள் தொலைக்காட்சியை பிடுங்கி விட்டார்கள். அவர் மற்ற தொலைக் காட்சிகளில் பேசினாலும் அந்த நேர்காணல் ஒளிபரப்பு ஆகாது. ராமதாஸ் தைலாபுரம் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. யாரையும் சந்திக்கவோ, பேசவோ கூடாது என்பது போன்று தடைகளை விதிக்கிற போது, அவற்றை எல்லாம் எதிர்த்து அவர் போராடுகிறார்.

தொழில், கலை, அரசியல் துறையினரைச் சந்தித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
Photo: Union Home Minister Amit Shah

தவெகவில் சேர்ந்துள்ள ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் என்பவர்தான், சசிகலா, சேகர் ரெட்டி, எடப்பாடியின் சம்பந்தி ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தியவர் ஆவார். பாஜக சொல்லிதான் அவர் சோதனை நடத்தினார். தற்போது தவெகவில் பாஜகவின் ஆதரவோடு தான் அவர் சேர்ந்திருப்பார். தவெக என்பது பாஜக ஆதரவு பெற்ற ஒரு இயக்கமாகும். ராமதாஸ் – அன்புமணி மோதலை உருவாக்கியது பாஜக தான். தற்போது கனிமொழியை தூதுக்குழுவில் இணைத்து வெளிநாடுகளுக்கு பாஜக அனுப்பியது. அதன் மூலம் சொல்வது என்ன என்றால்? எங்களால் கனிமொழியை கையில் எடுத்து திமுகவை உடைக்க முடியும் என்பதுதான். விஜயை கொண்டுவந்து இஸ்லாமியர்களின் வாக்குகளை பிரிப்பது ஆகட்டும், ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜை கொண்டுவந்து தவெகவில் நுழைப்பது ஆகட்டும். சீமான், பெரியாரை எதிர்ப்பது ஆகட்டும். பிரேமலதாவுக்கு, சீட்டு தராமல் இருப்பதாகட்டும் எல்லாவற்றிலும் பாஜகவின் பங்கு உள்ளது. அன்புமணிக்கு, அதிமுகவில் ராஜ்யசபா இடங்கள் கேட்பதிலும், அவர் மறுப்பதிலும் பாஜகவின் கைவண்ணம் இருக்கிறது. இங்கு ராமதாஸ் – அன்புமணியை முட்ட விடுவதும் அவர்கள்தான்.

ராமதாஸ் தான் கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். வன்னியர் சங்கம் ராமதாசின் பின்னால் தான் நிற்கிறது. ஆனால் ராமதாஸ் தான் கட்சி. அவர் தான் தியாகி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அன்புமணிக்கு வயதும், மத்திய அரசின் ஆதரவும் உள்ளது. அதனால் அன்புமணியிடம் சென்றால் தான் பிழைக்க முடியும். அதனால் நிர்வாகிகள் அனைவரும் அன்புமணியிடம் செல்கிறார்கள். ராமதாசுக்கு, பாஜக கூட்டணியை ஆதரிப்பதில் பெரிய பிரச்சினை எதுவும் கிடையாது. ராமதாஸ் பாஜகவை எதிர்க்க மாட்டார். அன்புமணி, பாஜகவின்  ஆதரவோடு செழித்தோங்கி வருவார். ஆனாலும் ராமதாஸ் எதிர்க்காமல் அவர்களுடனே இருப்பார். ராமதாஸ் நிச்சயமாக, தவெக உடன் கூட்டணி செல்ல மாட்டார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ