Homeசெய்திகள்கட்டுரைகூட்டணி ஆட்சி! ஆப்பை இறக்கிய அமித்ஷா! ரணஜன்னி கண்ட எடப்பாடி!

கூட்டணி ஆட்சி! ஆப்பை இறக்கிய அமித்ஷா! ரணஜன்னி கண்ட எடப்பாடி!

-

- Advertisement -

அண்ணாமலையை தமிழக தேர்தல் பொறுப்பாளராக கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

அமித்ஷா தமிழக வருகையின் போது அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புறக்கணித்ததன் பின்னணி குறித்து  மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூபில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை நடந்து முடிந்துள்ளது. 8ஆம் தேதி மதுரை வந்த அமித்ஷா, அங்கு கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அமித்ஷா வருகையின்போது அவருடன் பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்க வைப்பதற்காக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சென்று சந்தித்து இருந்தார். ஆனால் அமித்ஷா வருகையின் போது அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளே அவர்களை மதிக்கவில்லை. அமித் ஷாவை சந்திப்பதற்கு முதல்நாள் வரை எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்கவும் இல்லை. அவரது வருகை தொடர்பாக எடப்பாடி எந்த ஆர்வமும் காட்டவும் இல்லை.

விரக்த்தியின் உச்சத்தில் அமித்ஷா – ஆ.ராசா விமர்சனம்!

ராமதாசின் வீட்டிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி சென்று பேசியபோது, ராமதாஸ் அதை கண்டுகொள்ளவில்லை. அமித்ஷா வருகையின்போது அவரை நேரில் சந்திக்க குருமூர்த்தி அழைத்துள்ளார். இல்லாவிட்டால் அன்புமணியை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால் ராமதாஸ் எந்தவித பதிலும் கூறவில்லை. இந்த சந்திப்பின்போது சைதை துரைசாமியும் உடன் சென்றுள்ளார். ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. அமித் ஷா தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து வர உள்ளதாகவும், அவரது ஒவ்வொரு வருகையின்போதும் ஒரு கட்சி தலைவரை அழைத்து கூட்டணியை உறுதிபடுத்த வேண்டும் என்றும் பாஜகவினர் திட்டமிட்டிருந்தனர். இந்த முறை பாமக உடன் கூட்டணியை உறுதிபடுத்த வேண்டும் என்றும், அடுத்த முறை தேமுதிக உடன் கூட்டணியை உறுதிபடுத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில், தனது பயணத்தின் போது எடப்பாடி நேரில் சந்திக்க வராததால் ஆத்திரமடைந்த அமித்ஷா, அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கூட்டணி ஆட்சி என்று சொன்னார். மேலும் ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி எடப்பாடியிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பிடுங்குவது என்றும் தீர்மானித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, ஏன் அமித்ஷாவை சென்று சந்திக்க செல்லாமல் தைரியமாக இருப்பது ஏன் என்றால்? அதற்கான பின்னணியும் உள்ளது. பாஜக ஏற்கனவே செங்கோட்டையனை அதிமுக பொதுச் செயலாளராக கொண்டுவந்து, அவர் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்றும், வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைப்பது என்றும் முடிவு செய்திருந்தது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிந்து கொண்டார். நாம் என்ன தான் இறங்கி சென்றாலும் பாஜக நமக்கு செக் வைக்கிறார்கள். அதனால் பாஜகவை எதிர்த்து பார்த்துவிடலாம் என்று எடப்பாடி முடிவு செய்துவிட்டார். அதனால் விஜயுடன் கூட்டணி அமைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். விஜய், தனியாக நின்றால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என்று அவருக்கே தெரியும். அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் 30 இடங்கள் வரை வெற்றி பெறலாம் என கணித்துள்ளனர்.

அதேபோல், விஜய் உடன் கூட்டணி அமைத்தால், அதிமுக ஆட்சியை பிடிக்கக் கூட வாய்ப்பு உள்ளதாக எடப்பாடி கருதுகிறார்கள். இந்த கூட்டணிக்கு பாமக வந்து விட்டால் உறுதியாக ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எடப்பாடி கருதுகிறார். பாஜகவை கழற்றிவிட்டால், சிறுபான்மை வாக்குகளும் வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். விஜய்க்கு இஸ்லாமியர்கள் வாக்குகள் வராவிட்டாலும், கிறிஸ்தவர்களின் வாக்குகளை கவர்ந்துவிடலாம். விஜய் கூட்டணி, அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் என எல்லாவற்றையும் சேர்த்தால் ஆட்சியை பிடித்துவிடலாம். விஜய்க்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்துவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுகிறார்.

ஆனால் இதை பாஜக நடக்க அனுமதிக்க மாட்டார்கள். தேவைப்பட்டால் விஜயை தூக்கி உள்ளே வைப்பார்கள். அதற்கான சமிக்ஞையைதான் மதுரையில் அமித்ஷா கொடுத்துள்ளார். அவர் இரண்டு முக்கியமான விஷயங்களை சொல்லியுள்ளார். டெல்லி பாணியில் தமிழகத்தை ஆட்சியில் பிடிப்பாம் என்றார். அதாவது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தூக்கி சிறையில் வைத்துவிட்டு, ஆம் ஆத்மி கட்சியை உடைத்து, மக்கள் செல்வாக்கு இல்லாத அதிஷியை முதலைமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வைத்து, ஆட்சியை பிடித்தார்கள். அதேபோல் தமிழ்நாட்டிலும் செய்ய போகிறோம் என்பதற்கான சமிக்ஞைதான் இது. இது திமுகவுக்கான எச்சரிக்கையாகும். அதிமுகவுக்கு கூட்டணி ஆட்சி என்கிற செக் வைக்கிறார்கள். ஆனால் இதற்கு எடப்பாடி எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. காரணம் இரட்டை இலை சின்னத்தை பறித்துக்கொண்டு, தம்மை சிறையில் வைக்க பாஜக தயாராக உள்ளது என்கிற அச்சத்தில் எடப்பாடி உள்ளார். அவர்கள் சொல்வதற்கு தலையாட்டா விட்டால் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டி வரும் என அவர் நினைக்கிறார்.

"நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: DMK

இருந்தாலும் நடப்பதை பார்த்துக்கொள்ளலாம். விஜயுடன் சேர்ந்து களத்தில் இறங்குவோம். மக்களிடம் சிம்பதியை ஏற்படுத்தி, பாஜகவை காலி செய்துவிடலாம். திமுகவும் பாஜகவை எதிர்க்கும் நிலையில், நாமும் எதிர்ப்போம். இருவரில் யார் வெற்றி பெற்றலாம் பரவாயில்லை. அதிமுக எதிர்க்கட்சியாக வந்தாலும் பரவாயில்லை. பாஜகவை இங்கு கால் ஊன்றவிடாமல் அழித்துவிட வேண்டும் என்றுதான் எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இதனை உடைக்கும் விதமாக தான் கூட்டணி ஆட்சி என்று குண்டை அமித்ஷா தூக்கி போட்டுள்ளார். எடப்பாடி கூட்டணி ஆட்சி இல்லை என்று சொன்னால், தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்கி 10 நாட்களில் சின்னத்தை முடக்கி விடுவார்கள். செங்கோட்டையனை பொதுச் செயலாளர் ஆக்கி, அவருடன் கூட்டணி வைப்பதற்கான வேலைகளும் போய்க் கொண்டிருக்கிறது. எடப்பாடியை கட்சியில் இருந்து துரத்திவிடுவார்கள். இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டால், விஜய் அவருடன் கூட்டணி அமைப்பாரா?  அப்படி கூட்டணி சேர்ந்தால் கட்சி இரண்டாக உடைந்து விடும். இருவரும் தோல்வியடைந்து விடுவார்கள். இதுதான் அமித்ஷாவின் ராஜதந்திர திட்டமாக தற்போது களத்தில் இறக்கியுள்ளனர்.

பாஜக கூட்டத்தின்போது அண்ணாமலைக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. இது அமித்ஷாவுக்கு மூன்றாவது பாயிண்டாக இருந்தது. ஆனால் அவர் சொல்லவில்லை. ஒன்று கூட்டணி ஆட்சி. இதற்கு எடப்பாடி பதில் சொன்னாலும் காலி. சொல்லா விட்டாலும் காலி. மூன்றாவது வாய்ப்பு என்ன என்றால் எடப்பாடி மிஸ் ஆகிவிட்டார் என்றால் மீண்டும் அண்ணாமலையை கொண்டுவருவது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு விழுகிற வாக்குகள் எல்லாம் மோடி, அண்ணாமலைக்காக தான். அதை மற்றொருவரால் கொண்டுவர முடியாது என்பது அந்த கூட்டத்தில் தெரிந்துவிட்டது. இதனால் அடுத்து அண்ணாமலைக்கு தமிழக தேர்தல் பொறுப்பாளர் போன்ற பதவியை வழங்கி, எடப்பாடியை கட்டம் கட்டி தூக்கி அடிப்பார்கள். செங்கோட்டையனை உள்ளே கொண்டு வருவார்கள். அண்ணாமலை, செங்கோட்டையன்,  தினகரன் ஆகியோர் இணைந்து மெகா கூட்டணி அமைத்து, எடப்பாடியை கட்சியில் இருந்து விரட்டுவார்கள். விஜய்க்கும் அமலாக்கத்துறை மூலம் அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ