Homeசெய்திகள்கட்டுரைகுருமூர்த்தி கொடுத்த ஆஃபர்! 3 மணி நேரம் நடந்தது இதுதான்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

குருமூர்த்தி கொடுத்த ஆஃபர்! 3 மணி நேரம் நடந்தது இதுதான்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

-

- Advertisement -

பாமகவுக்கு வன்னியர்களை தவிர்த்து, ஆதரவாக சிறுபான்மை சமுதாயம் உள்ளதாகவும். காங்கிரஸ் உடன் பாமக இருந்தவரை அந்த கட்சி வெற்றி பெற்றதாகவும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசியதன் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாமக நிறுவனர் ராமதாசை, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசியுள்ளார். ராமதாஸ் – அன்புமணி இடையிலான பிரச்சினையை அவரால் சமாளித்து விட முடியாது. இது மிகவும் சிக்கலான விஷயமாகும். அன்றைய தினம் அன்புமணி தைலாபுரம் வீட்டிற்கு சென்றபோது ராமதாஸ் முகம் கொடுத்து பேசவில்லை என்று சொல்கிறார்கள். பிரேமலதா, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக நம்மை சரியாக நடத்தவில்லை. அந்த கூட்டணியில் சென்றிருந்தால் 3 இடங்களில் வென்றிருக்கலாம் என்று நினைக்கிறார். விருதுநகரில் எடப்பாடியை விட, பாஜகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. அதேபோல், தருமபுரியில் தேமுதிகவுக்கு வாக்கு வங்கி உள்ளது. அங்கு சௌமியா வெற்றி பெற்றிருக்கலாம். கோவையில் அண்ணாமலை நெருக்கி இருக்கலாம். பிரேமலதா, அதிமுக கூட்டணி வாய்ப்பை காட்டி திமுகவில் இணையலாம் என்று முடிவில் இருக்கிறார்கள். அன்புமணியும், தன் மீது குத்தப்பட்டுள்ள பாஜக முத்திரையை அகற்றும் விதமாக, தொகுதி மறுசீரமைப்பை 20 வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பாமக பொருளாளராக திலகபாமா தொடர்வார் - அன்புமணி அதிரடி!

ஆடிட்டர் குருசாமி, சைதை துரைசாமி போன்றவர்கள் ராமதாசை சந்தித்து பேசினாலும் அவர் மனம் மாற மாட்டார். குருமூர்த்தி நடப்பு ரீதியாக போயிருக்கலாம். அன்புமணி கேட்டுக்கொண்டதால் போயிருக்கலாம். அல்லது பாஜக தலைமை அறிவுறுத்தியன் பேரில் சென்று இருக்கலாம். ஆனால் விளைவு தனக்கு லாபம் இல்லாத ஒன்றை ராமதாஸ் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 2019ல் அமித்ஷாவை புறந்தள்ளி விட்டுதான் அதிமுக கூட்டணி அமைத்தார்கள். தைலாபுரத்தில் சென்று 7 + 1 என்று பேசி முடித்தார்கள். பாஜகவுக்கு 7 தொகுதிகளை கட்டினார்கள். இன்றைக்கு ஓபிஎஸ், இந்திய ராணுவத்திற்கு கிடைத்த வெற்றி இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறார். மோடியின் பெயரை கூட அவர் சொல்லவில்லை. மோடி சொன்னதால்தான் ஓபிஎஸ் சென்று அதிமுகவுடன் இணைந்தார். கட்சியை இன்றைக்கு முழுமையாக எடப்பாடி அபகரித்துவிட்டார். அமைப்பு பலத்தை வைத்து, எடப்பாடி கட்சியை அபகரித்துவிட்டார். ஓபிஎஸ்-ஏ தனக்கு ஒதுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ராமதாஸ் எப்பேர் பட்ட பார்கெய்னர். பாஜகவை பொருத்தவரை எதிர்ப்பு வாக்குகள் சேர்ந்து வந்துவிடக்கூடாது.

மாநிலக் கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? -  ராமதாஸ் கேள்வி! 

ஓபிஎஸ் இல்லாததால் 2021ல் கிடைத்த மாற்று சமுதாயத்தினரின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்று ராமதாஸ் எண்ணுகிறார். ஓபிஎஸ் மீது பற்றுதல் கொண்ட செங்குந்தர், உடையார், கிராமணி, நாடார் சமுதாய வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்று சொல்கிறார்கள். அதற்கு ஆதராமாக விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுகவின் 23 சதவீத வாக்குகள் திமுகவுக்கு போய்விட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் திமுக 65 சதவீத வாக்குகள் எடுத்தது. 2024ல் ஈரோடு கிழக்கில் திமுக 57 சதவீதம் வாக்குகள் பெற்றது. பாமக இல்லாமலேயே திமுக அணி வட தமிழகத்தில் 50 சதவீத வாக்குகளை பெற்றுவிடலாம். 36 தொகுதிகளில் அதிமுக தங்களால் தான் வெற்றி பெற்றது என்றும், ஆனால் அதிமுகவால் தங்களுக்கு எந்த பலனும் இல்லை என்று அன்புமணி குற்றம்சாட்டினார். அதிமுக தரப்பிலும் கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. அதிமுக தலைமையில் பாமக செல்லும்பட்சத்தில் 100க்கு 90 தொகுதிகளில் ஸ்டாலின் தோற்கடித்துவிடுவார்கள்.

கேரளா வளா்ச்சியடைய விழிஞ்சம் துறைமுகம் ஒரு சிறந்த உதாரணம் – பிரதமா் மோடி பேச்சு

இதில் பாமகவுக்கு பலமாக இருப்பது சிறுபான்மை மக்களின் வாக்குகள் தான். அந்த வாக்குகள் இருக்கும் வரை 2006ல் காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்றார்கள். அதன் பின்னர் விசிக காங்கிரஸ் உடன் சேர்ந்துவிட்டதால் பாமக தோற்றுவிட்டது. இதைதான் ராமதாஸ் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தாலும் சேருவேன். பாஜக கூட்டணியில் சேர மாட்டேன் என்று சொன்னார். பாஜக வடதமிழகத்தில் பாமகவை நம்பி இருப்பதில் எந்த பயனும் கிடையாது. 3 முறை பாமகவுடன் கூட்டணி அமைத்தபோதும் பாஜக வெற்றி பெறவில்லை. ஒரு மெகா அணி அமைப்பதற்காக தான் பாமக உடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறார்கள். லாபம் இல்லாமல் ராமதாஸ் கூட்டணிக்கு வருவாரா? அரசியலில் லாபம் தானே குறி, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ