Homeசெய்திகள்கட்டுரைடெல்லி மீட்டிங்கில் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை! மிரண்டு பார்த்த பிற மாநில முதல்வர்கள்!

டெல்லி மீட்டிங்கில் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை! மிரண்டு பார்த்த பிற மாநில முதல்வர்கள்!

-

- Advertisement -

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை தராதது குறித்து பிரதமரிடம் நேருக்கு நேராக வாதிட்டார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்தும், அது தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள விமர்சனங்கள் குறித்தும் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்ததால், திமுகவினர் மீது போடப்பட்டு உள்ள அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்துவிடும் என்று சொன்னால், இந்த குற்றச்சாட்டு திமுக மீதானதா? அல்லது பாஜக மீதானதா? அப்போது பாஜக தன்னிடத்தில் யார் வந்தாலும் அவர்களை உடனடியாக வழக்குகளில் இருந்து விடுவித்து விடுவார்கள் என்றால்? அவர்கள் பொய் வழக்கு போடுவார்கள், அதன் மூலம் வரவழைப்பார்கள் என்கிற கருத்தை பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக சொல்லியுள்ளது.

பாஜக கூட்டணியில் இல்லாதவர்கள் இப்படி சொன்னால் அது ஜனநாயக ரீதியான மாற்றுக்கருத்தாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த விமர்சனத்தை எடப்பாடி, சீமான் போன்றவர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்கள் யார் என்று பார்த்தால்? பாஜகவுக்காக பெரியாரை தரம் தாழ்ந்து பேசுகிற சீமான், பாஜக கூட்டணியில் சரணடைந்து கிடைக்கிற எடப்பாடி பழனிசாமி இவர்கள் வந்து பேசுகிறார்கள். ஆனால் டெல்லியில் சென்று முதலமைச்சர் என்ன பேசினார். தமிழ்நாட்டிற்கு 50 சதவீத வரிப்பகிர்வு எங்களுக்கு வேண்டும். நீங்கள் மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்காமல் ஏமாற்றுகிறீர்கள் என்று நேருக்கு நேராக நின்று மக்களுக்காக வாதாட அவர் போகிறார்.

மாநில அரசின் உரிமையை மீட்க நாம் ஒன்றிய அரசிடம் தான் முறையிட முடியும். அதற்காக தான் நிதி ஆயோக் வைத்துள்ளனர். இல்லாவிட்டால் அதை கலைத்து விடலாமே. இந்தியா என்பது முழுக்க முழுக்க மாநிலங்களால் ஆனது. இந்தியா என்று எதாவது தனியாக நிலப்பரப்பு உள்ளதா? என்றால், ஒட்டுமொத்த மாநிலங்களின் கூட்டமைப்பை தான் அப்படி சொல்கிறோம். அப்போது மாநிலங்களின் சுயாட்சி என்பது மிகவும் முக்கியமானது. மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை தர மறுப்பதன் மூலம் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. நாம் ஒன்றும் இலவசமாக கேட்கவில்லை. நாம் மத்திய அரசுக்கு செலுத்துகிற வரிப்பணத்தை தான் கேட்கிறோம்.

எனவே பேரிடர் காலங்களில் உதவியோ, நமக்கான கல்வி நிதி, உட்கட்டமைப்பு, சாலை மேம்பாட்டு திட்டங்களை கேட்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. அதனால் தான் 50 சதவீதம் வரிப்பகிர்வு வேண்டும் என்கிற உரிமையை முதலமைச்சர் கேட்கிறார். அவர் கேட்கவே கூடாது. அவர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவே கூடாது என்றால்? அவர் போகாமல் இருப்பதும் ஒருவிதமான போராட்ட அணுகு முறையாகும். அனைத்து நிறுவனங்களுக்கு உள்ளும் முரண்பாடுகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும். அதற்காக ஒருவர் முகத்திலேயே விழிக்க மாட்டேன் என்று அரசியலில் இருக்க முடியுமா?

"பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை"- அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

அண்ணா அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு என்கிற முழக்கத்தை வைத்தார். அதுமாதிரி சீமான் தமிழ்தேசியத்திற்கு என்று தனி நாடு வேண்டும் என தமிழ்நாட்டில் பேசினால் அவரை தமிழ் தேசிய போராளியாக ஒத்துக்கொள்ளலாம். சீனா உடன் போர் நடைபெற்றபோதுதான் அந்த கோரிக்கையை அண்ணா கைவிட்டார். இது ஒரு போர்க்காலம். போர்க்காலத்தில் நாம் கட்சி நலன்களை பார்க்க முடியாது. பாஜக ஆளுகிறதே என்பதற்காக நாம் அதை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் அப்போது இல்லை. மற்றபடி தேச பாதுகாப்பு தொடர்பாக திமுக கேள்வி எழுப்பாமலா உள்ளனர்?

நிதி ஆயோக் கூட்டத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் முதலமைச்சருக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டது. அந்த முக்கியத்துவம் எதற்காக வழங்கப்பட்டது என்றால் பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தற்காக. மாநில சுயாட்சிக்காக பல மாநில முதலமைச்சர்களை, கட்சித் தலைவர்களை அழைத்து கூட்டங்களை நடத்துகிறார். இந்தியா கூட்டணியை நாம் தோற்கடித்து விட்டோம் என்று பாஜக நினைக்கிறபோது அது வேறு ஒரு வடிவத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு தமிழ்நாடு மிகப்பெரிய  முன்னுதாரணமாக திகழ்கிறது. அவரது தலைமைப் பண்பை பார்த்து அந்த முக்கியத்துவம்  அளித்துள்ளது. இங்கு பழமைவாத கருத்துக்களை, பிற்போக்கு கருத்துக்களை யாரும் ஏற்கவில்லை. பாஜக எத்தனை வேஷங்கள் போட்டு வந்தாலும், அவர்கள் செய்கிற தந்திரங்கள் இங்கே பலிப்பது இல்லை. வடநாட்டில் அவர்கள் செய்கிற எந்த தந்திரங்களும் தமிழ்நாட்டில் எடுபடாது.

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி தர மறுக்கிறார்கள் என்று கேட்டால், நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள். மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லுரிகள் உள்ளன. எல்லா கட்டமைப்புகளும் உள்ளன.சாலை வசதிகள் உள்ளன. அதனால் உ.பி. போன்ற பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி தருகிறோம் என்கிறார்கள். ஆனால் இதே மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால்? தமிழ்நாடு திராவிட இயக்கத்தால் சீரழிந்துவிட்டது என்று சொல்கிறான். இதில் ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். நிதி கேட்டால் வளர்ந்துவிட்டது என்று சொல்கிறார்கள். மற்ற நேரத்தில் சீரழிந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அறிவுப் புரட்சியை ஏற்படுத்திவிட்டார்கள். இளைஞர்கள் படித்து ஐ.டி. கம்பெனிகளில், வெளி நாடுகளில் உயர் பதவிக்கு போகக்கூடிய இடத்திற்கு அவர்கள் வந்துவிட்டார்கள். இவர்கள் சமோசா விற்பதற்கு நம்மை கூப்பிடுகிறார்கள். பினராயி விஜயன் ஒருமுறை சொன்னார். பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் அந்த தொகுதியில் நான் பள்ளிக்கூடங்களை அதிகப்படுத்துவேன் என்று சொன்னார். முட்டாள்தனம் இருக்கிற இடத்தில் பாஜக இருக்கும். அறிவு என்கிற தீபத்தை ஏற்றிவைத்துவிட்டால், பாஜக என்கிற இருள் விலகிவிடும் என்று சொன்னார். தமிழ்நாடு  அறிவொளி தீபத்தை ஏற்கனவே ஏற்றிவைத்துவிட்டது. அதனால் அவர்களால் வெல்ல முடியவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ