ஆதவ் அர்ஜுனாவை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானே வேண்டாம் என கூறிவிட்டதாக ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துளளார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் திமுக குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ள நிலையில், இதனை ஆய்வாளர் கிருஷ்ணவேல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- ஆதவ் அர்ஜுனா – பத்திரிகையாளர் மணியின் பேட்டி என்பது பெய்டு பேட்டி போன்று உள்ளது. அந்த யூடியூப் சேனலின் வீடியோக்கள் அண்மை காலமாக பெரிய அளவில் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை. இந்நிலையில் ஆதவின் வீடியோ 1.5 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதனால் பணம் செலுத்தி புரமோஷன் செய்வதாகவே தெரிகிறது. ஆதவ் அர்ஜுனா தன்னை தானே புரமோஷன் செய்து கொண்டுள்ளார். அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரனாக மாறியவர் ஆதவ் அர்ஜுனா. 25 வயது வரை அவரை யாருக்கும் தெரியாது. மிகவும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் பேசுவதை பார்த்தால் அரசியலில் எல்லோரும் அவரை ஏமாற்றிவிட்டது போல பேசுகிறார்.
அம்பேத்கரை நன்றாக புரிந்து கொண்டவர் தான், மகா பெரியவரை நல்லவர் என்பாரா?. அம்பேத்கர் மேடையில் அமர்ந்துகொண்டு ஆதவ் அர்ஜுனா ஓரு சனாதனவாதியை நல்லவர் என்று சொன்னால் நீங்கள் அம்பேத்கரை படித்த லட்சணம் தெரிந்து விட்டது. பத்திரிகையாளர் மணி திமுகவை விமர்சிப்பதில் தவறு இல்லை. ஆனால் அவர் விமர்சிக்கவில்லை அவதூறு பரப்புகிறார். மணி தனது பாஜக ஆதரவு நிலைப்பாட்டினை மறைத்துக் கொண்டு திமுக எதிர்ப்பு பேசிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் ஆதவ் அம்பேத்கரியம் பேசுவதாக மன்னராட்சி என பேசிக்கொண்டிருக்கிறார்.
விஜயுடன் கூட்டணி அமையுங்கள், நான் நிதியுதவி செய்கிறேன் என திருமாவிடமும், கட்சியின் நிர்வாகிகளிடமும் கூறியதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டணி குறித்து மேடையில் பேச வேண்டியது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தான். ஆதவ் அர்ஜுனா அல்ல. கூட்டணி தொடர்பாக கட்சிக்குள் விவாதிக்கலாம், மேடையில் ஆதவ் பேசக்கூடாது. திருமாவே ஆதவ் அர்ஜுனா பேசுவது அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும், அது கட்சியின் கருத்தாகத்தான் பார்க்கப்படும் எனவே அவர் பேசியது தவறு என்று சொல்லியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா நான் 2 ட்விட், 2 பேட்டி தான் கொடுத்தேன். அதற்கே இதற்கே இவ்வளவு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் திருமாவளவன் வருத்தப்படுவதாக ஆதவ் கூறியுள்ளார். இதன் முலம் திருமாவளவன் பேச தைரியம் இல்லாதவர் என்று குறிப்பிடுகிறாரா. திருமா, 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் சேர்ந்தது முதல் அவரை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பலர் செயல்பட்டு வருகின்றனர். அதற்கு கொம்பு சீவுகின்ற வேலையை மணி போன்றோர் செய்கின்றனர். அவர்களுக்கு திருமாவளவன் மீது அன்பும் கிடையாது, பாசமும் கிடையாது. அவர்களுக்கு திமுக மீது வெறுப்பு. அதன் வெளிப்பாடுதான். திமுகவுக்கு அடுத்தபடியாக கொள்கையில் உறுதியாக உள்ள கட்சி என்றால் அது விடுதலை சிறுத்தைகள் தான். அந்த கட்சியில் உள்ளவர்கள் யாரும் விலை போகாதாவர்கள்.
2015ஆம் ஆண்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவருடன் பணியாற்றியதாகவும், தான் அந்த குழுவில் இருந்து திமுகவை மிகப்பெரிய எதிர்க்கட்சியாக மாற்ற பாடுபட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். 50 ஆண்டுகாலம் அரசியல் செய்த ஸ்டாலினுக்கு தெரியாதது, ஆதவுக்கு தெரிந்து விட்டதா. எம்.பி சீட் கிடைக்காததால் ஆதவ் அர்ஜுனா திமுகவை விட்டு வெளியேறினார். 2015ல் தான் ஆதன் அரசியலுக்கு வந்துள்ளார். இந்த 9 வருட அரசியல அனுபவத்தில் எவ்வளவு மக்களை சந்தித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி பேச இவருக்கு என்ன உரிமை உள்ளது. அவர் எத்தனை ஊர் சுற்றியுள்ளார். எவ்வளவு மக்களை சந்தித்துள்ளார். எவ்வளவு அரசியல் தலைவரகளை சந்தித்து பேசியுள்ளார். இவர் ஏசி அறையில் அமர்ந்துகொண்டு, ஒவ்வொரு கட்சிக்காரனிடமும் டீல் பேசிக்கொண்டிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு ஆபத்தான நபர்ஆதவ் அர்ஜுனா. தனக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக ஆதவ் அரசியலுக்கு வந்துள்ளார். அவர்களது திட்டமே அதிமுக, விஜய், நாம் தமிழர் கட்சிகளை கூட்டணி அமைக்க செய்வதுதான். ஆனால் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதாக சொல்லி கடைசி நேரத்தில் கூப்பிடாததால் சீமான் மறுத்துவிட்டார். தமிழ்நாட்டில் லாட்டரி சீட் விற்பனைக்கு அனுமதி கிடைக்காததால், அவருக்கு திமுக மீது ஆத்திரம் ஏற்பட்டது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜக ஆளும் மாநிலங்கள் லாட்டரிக்கு அனுமதி வழங்கியபோதும் ஸ்டாலின் அனுமதிவிட்டார் என்பதால் ஆதவுக்கு ஆத்திரம். இவர்கள் உள்ளே வருவதே லாட்டரியை மீண்டும் கொண்டுவருவதற்காக தான். மக்களுக்கு தேவையான பணிகள் குறித்து என்றாவது பேசியுள்ளாரா?.
திமுக ஆட்சியில் அதிகாரிகள் தான் முடிவே எடுப்பதாகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முடிவு எடுப்பது இல்லை என்றும் ஆதவ் குற்றம்சாட்டியுள்ளார். ஆதவுக்கு அரசியல் அமைப்பு எப்படி செயல்படுகிறது என தெரியவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் இயற்றும் சட்டங்களை, செயல்படுத்துவதான் அதிகாரிகளின் வேலை. ஆனால் அதிகாரிகளுக்காக அரசு சட்டங்களை இயற்றவில்லை. துணை முதலமைச்சர் உதயநிதி, ஆதவை போன்று மாமனார் காசில் பணக்காரர் ஆனவர் இல்லை. தனது சொந்த உழைப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர். திமுக ஆட்சியில் இல்லாதபோதே, தனது நிறுவனத்தை முன்னணி நிறுவனமாக மாற்றினார். திரைப்படத்துறையிலும் ஓரளவு மதிக்கக்கூடிய நடிகராக இருந்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும் உடனடியாக சீட் தரவில்லை. சீட் கொடுத்தபோது ஜெயித்துக்காட்டினார். பின்னர் துணை முதலமைச்சராக உயர்ந்தார். இவை அனைத்தும் உதயநிதியின் உழைப்பில் நிகழ்ந்தது. ஸ்டாலினின் மகன் என்பதால், 234 தொகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். எய்ம்ஸ் ஒற்றை செங்கல்லை கையில் தூக்கிக்கொண்டு சென்றது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. உதயநிதி ஸ்டாலின் மீதான விமர்சனம் பத்திரிகையாளர் மணியின் விரக்தி, ஆற்றாமைதான் வெளிப்படுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.