பல்கலைக் கழகங்களில் சோசியல் ஜஸ்டிஸ், சயிண்டிபிக் அப்ரோச் தவிர வேறு ஏதும் பின்பற்றக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை வேந்தர்களுக்கு கூறியதன் மூலம் ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கல்வியாளர்கள் பாராட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஆளுநர் குறித்து முன்வைத்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக வல்லம் பஷீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கல்வியாளர்கள் பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.எம். ஒரு சட்டத்தை கொண்டு வந்தால், மத்திய அரசின் ஏஜெண்டாக இருக்கும் ஆளுநர் அதை தடுக்க முடியும் என்றால், மக்கள் ஓட்டு எதற்காக என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் 2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் எத்தனையோ முறை பல்வேறு இடையூறுகளை செய்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒருபோதும் ஆளுநருக்கு எதிராக இப்படி முதலமைச்சர் வெளிப்படவில்லை. நீதிமன்றத்தின் படிக்கட்டுகளை தான் ஏறினார். சட்டமன்றத்தில் தான் தீர்மானத்தை நிறைவேற்றினார். எந்த இடத்திலும் ஆளுநருக்கு எதிராக இப்படி வெளிப்பட்டது கிடையாது.
முதலமைச்சர் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். ஏன் என்று கேட்டபோது, நான் கிடப்பில் வைத்தால் நிராகரிக்கப்பட்டதற்கு சமம் என்று சொன்னார் ஆளுநர். அதன் பிறகு தீர்மானங்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கிறோம். சந்தேகம் இருந்தால் விளக்கம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சட்டத்துறை அமைச்சரை ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கிறோம். அதன் பிறகு ஆளுநரை சந்தித்து பேசி சுமூக முடிவை எட்ட எத்தணித்தோம். ஆனாலும் அவரிடத்தில் எந்த மாற்றமும் இல்லை.
அதற்கு பிறகுதான் நீதிமன்றத்திற்கு செல்கிறோம். நீதிமன்றம் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது நீங்கள் போக வேண்டாம். அவர் உங்களை கூப்பிடுவார் என்று உத்தரவு போட்டது. ஆளுநர் முதலமைச்சரை அழைத்துப் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் அவர் அழைத்துப் பேசவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் குட்டு வைத்துக்கொண்டே இருந்தது உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாய் ஒரு தீர்ப்பை பெற்று வந்தார் முதலமைச்சர். இதுவரை எந்த மாநிலத்தின் முதலமைச்சரும் அப்படி ஒரு தீர்ப்பை பெற்று வரவில்லை. 4 ஆண்டு காலம் இவ்வளவு பொருமையாக இருந்திருக்கிறார். ஜனநாயக முறையில் அவரை எதிர்கொண்டிருக்கிறார். அப்படி பொறுமை காத்ததற்கு இந்த எதிர்வினை கூட அவர் ஆற்றவில்லை என்றால் ஒரு சராசரி அரசில் முதலமைச்சருக்கு இருக்காதா? ஆளுநர் இப்போதும் திருந்திவிட வில்லையே. ஜெகதீப் தன்கரை வைத்து தீர்ப்பை விமர்சித்து வருகிறார்.
ஆளுநர் இப்போதாவது தனக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று ஒப்புக்கொள்கிறாரா? தனது அதிகாரங்கள் என்று உணர்ந்திருக்கிறாரா? அவருக்கு அது தெரியும். ஆனாலும் தற்போதும் அதை உணரமறுத்து, தமிழ்நாடு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் உறுதியாக நிற்கிறார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு மீண்டும் துணை வேந்தர்கள் மாநாட்டு என்று ஊட்டியில் கூட்டி அவமானப்படுகிறார். தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதை மாணவர்களிடம் தான சொல்ல வேண்டும். மாணவர்களால் உருவாக்கப்பட்டு, மாணவர்களால் அதிகாரத்துக்கு வந்த இயக்கம் திமுக. அப்படிப்பட்ட திமுகவின் தலைவராக இருந்து மாணவர்களிடம் தெரிவித்தார். அவர் முழுக்க முழுக்க கல்வி கட்டமைப்பு குறித்த கவலையை தான் முதலமைச்சர் பேசி இருக்கிறார். சமூகநீதி, அறிவியல்பூர்வமான அணுகுமுறை இவை இரண்டையும் தவிர்த்து வேறு எதையாவது செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எதற்கு சொன்னார்.
தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் ஆளுநர் கூட்டிய மாநாட்டிற்கு துணை வேந்தர்கள் போகக்கூடாது என்று அரசாணை வெளியிட்டிருக்க முடியும். முதலமைச்சர் கண்ணியம் கருதி அவ்வாறு செய்யவில்லை. அதையும் மீறி மாநாட்டிற்கு சென்றவர்கள், ஆளுநர் சொல்வதை பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தி விடக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை விடுத்துள்ளார். துணைவேந்தர்கள் வாயிலாக ஆளுநருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆளுநர் தற்போதும் பழைய தவறுகளை ஆளுநர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குதன் தனது உரையில் முதலமைச்சர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஆளுநர் கண்ணியமாக இருக்க 2 விஷயங்களை செய்யலாம். ஒன்று நாங்கள் தருகிற காசை வாங்கிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு, தூங்கலாம். அல்லது நீங்கள் பெட்டியை கட்டிக்கொண்டு பீகாருக்கோ, அல்லது உங்கள் ஆட்கள் இருக்கக்கூடிய பீகாருக்கோ போய்விடலாம். இதுதான் உங்களுக்கு நல்லதாகும்.
மாநில சுயாட்சி நாயகர் என்கிற பட்டம் அவருக்கு தான் பொருந்தும். ஏனென்றால் நம்பூதிரிபாட் செய்ய முடியாததை, கலைஞரால் செய்ய முடியாததை. இன்னும் பல மாநிலங்களின் தலைவர்கள் செய்ய முடியாததை மு.க.ஸ்டாலின் செய்து முடித்தார். அதுதான் அவருக்கு பாராட்டு விழா. மாநில சுயாட்சியை மீட்டெடுத்த பெருமை என்னுடையது அல்ல. மாநில சுயாட்சியின் நாயகர்கள் தமிழ்நாட்டு மக்கள் என்று முதலமைச்சர் சொன்னார். அத்தகைய முதலமைச்சரையே இந்த அளவுக்கு பேசுகிற சூழ்நிலையை ரவி உருவாக்கி வைத்திருக்கிறார். அப்போது ஆளுநர் ரவி மேன்மையானவரா? தன்கர் நாடாளுமன்றம் தான் உயர்ந்தது என்று சொல்கிறபோது, அது சட்டமன்றத்திற்கு பொருந்தாதா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார். இது சட்டம் தெரிந்த, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களின் புரிதலாகும்.
முதலமைச்சர் சொன்னார், இடைக்காலத்திற்காக வந்து தற்காலிகமாக தங்கியிருக்கும் ஒரு குடியிருப்புவாசி மீது, நீங்கள் நீதிமன்றத்தை மதிக்கவில்லை என்றால் நீங்கள் அவ்வளவு பெரிய ஆளா? சட்டத்தை மதிக்க மாட்டேன் என்று சொல்கிற அளவுக்கு சூப்பர் பவர் இருக்குமானால், அந்த பவரை என்ன என்று காட்டுங்கள். உங்களுக்கு அதிகாரம் உள்ளதாக நினைக்கிறீர்கள் அல்லவா? அதை காட்டுங்கள். தற்போது ஒன்றே ஒன்றுதான் செய்ய முடியும். ஆளுநர் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும் என்கிற ஒரே ஒரு தீர்ப்பை பெற்றுவந்தால் போதும் ஆளுநர்களின் ஆட்டம் ஒட்டுமொத்தமாக காலியாகி போகும். ரவிக்கு அப்போதுதான் கை, கால் நடுக்கம் வந்துவிடும். ரவிக்கு என்ன என்றால், நமக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்து காரணமாக காவல்துறை எதுவும் செய்யாது என்று நினைக்கிறார். அதனால் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறார். குறைந்தபட்சம் தலைமை செயலாளருக்கு நிகரான அதிகாரத்தை அவருக்கு கொடுத்து விடலாம். இதற்கான பணிகளை தமிழக முதலமைச்சர் மேற்கொள்வார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதன் பிறகு தான் ரவி போன்றவர்கள் சட்டத்தை மதிக்கக்கூடிய இடத்திற்கு வந்து நிற்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.