Homeசெய்திகள்கட்டுரைபாகிஸ்தானுடன் போரா? நாடகத்தை நிறுத்து! ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு ரகசியம் சொல்லவா?

பாகிஸ்தானுடன் போரா? நாடகத்தை நிறுத்து! ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு ரகசியம் சொல்லவா?

-

- Advertisement -

பாகிஸ்தானுடன் இந்தியா போருக்கு தயாராகிறது என்று வெளியாகும் செய்திகள் வருத்தம் அளிப்பதாவும், போரால் யாருக்கும் எப்போதும் நன்மை கிடைக்காது என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், போரின் பின்விளைவுகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- பாகிஸ்தான் நல்ல நிலைமையில் உள்ளதா? என்றால் இல்லை. அங்கு 60 சதவீதம் பேருக்கு 3 வேளை சாப்பாடு கிடைக்கவில்லை. ஒரே ஒருவேளை சாப்பிட்டு விட்டு உயிர்வாழ்பவர்கள் பலர் உள்ளனர். பெஷவர் ரயில் கடத்தல் சம்பவத்தில் 26 பேர் இறந்துபோனார்கள். அவர்கள் இந்திய தீவிரவாதிகள் ரயிலை கடத்தி விட்டார்கள் என்று சொல்கிறார்கள். நாம் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்று சொல்கிறோம். அப்போது மத ரீதியாகவே கொண்டு சென்றோம் என்றால் எப்போது இதற்கு தீர்வு வரும்.

பாகிஸ்தானில் ராணுவ முகாம்களுக்கு அருகிலேயே தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள் உள்ளன.  ராணுவம் ஆதரவு இல்லாமல் அவை செயல்பட முடியாது. 2019 புல்வாமா தாக்குதலின்போது நாம் ராணுவ முகாம்களை அழித்தோம். பயிற்சி முகாம் எங்கே உள்ளது என்று துல்லியமாக தெரிந்தால்தான் நீங்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த முடியும். அப்படி இருக்கிறபோது நம்மால் ஏன் நூற்றுக்கணக்கான கிலோ ஆர்டிஎக்ஸ் பொருளை ஏற்றிவந்த வாகனத்தை பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு எப்படி அனுமதித்தோம்?. நாடு பல நேரங்களில் சொந்த பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக இந்த மாதிரியான தீவிரவாத தாக்குதல்களை அரசியல் ரீதியாக பயன்படுத்துகிறது. அது மிகவும் தவறாகும். அதே நேரத்தில் பாகிஸ்தான் போன்ற நாட்டை வறுமையில் தள்ளிவிட்டால் இன்னும் பேராபத்தாக தான் மாறும். போர் வந்தால் வடமாநிலங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். போருக்கு பின்பு பல அரசுகள் தோற்கடிக்கப்பட்டு உள்ளன. போர் எப்போதும் யாருக்கும் பலன் தராது.

போருக்கு ஆயத்தமாகிறது இந்தியா? என்பது போன்ற செய்திகளை வருகிறபோது பலநேரங்களில் வருத்தமாக உள்ளது. கார்கில் போர் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை கொடுத்தது. அப்போது நான் களப்பத்திரிகையாளர். சிம்லா ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்துவிட்டோம் என்று பாகிஸ்தான் சொல்கிறது. அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்ன? எல்லைக்கட்டுப்பாட்டு நாங்கள் மதிப்போம் என்று இருதரப்பும் சொல்கிறது. அதற்கு பிறகு தான் கார்கில் போரே நடைபெற்றது. அந்த போரில் எவ்வளவு பேர் இறந்தார்கள். சமீபத்தில் வெளிவந்த படம் கூட அதில் வீரமரணம் அடைந்த ஒருவருக்கான அஞ்சலியாக இருந்தது. அந்த போர் ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் நமக்கு ஆறவே இல்லை.

பாகிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் சிறைக்கு அனுப்பப்பட்டார். அதற்கு ஜனநாயக நாடான இந்தியா என்றைக்காவது கண்டனம் தெரிவித்ததா? காசாவுக்கு ஜனநாயக ரீதியான நியாயம் கிடைக்கவில்லை என்பதற்கு இந்தியா என்றைக்காவது கண்டனம் தெரிவித்ததா? ஜனநாயக விழுமியங்கள் மீது நமக்கு நம்பிக்கை இருந்தால், நமது அண்டை நாடுகளில் ஜனநாயகம் மீறப்படுகிற போது, அதற்கு எதிராக நாம் குரல் கொடுத்திருக்க வேண்டாமா? அப்போது நமக்கு அங்கிருந்து ஆதரவு கிடைத்திருக்கும் அல்லவா? ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா கடுமையாக முயற்சித்து வரும் நிலையில், கீவ் நகரின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டிரம்ப் என்ன சொல்கிறார், புடின் போரை நிறுத்துங்கள் என்று சொல்கிறார். வெள்ளை மாளிகையில் இருந்து சொன்னால் அவர் நிறுத்தி விடுவாரா?

சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

தன்னம்பிக்கை ஊட்டுகிற விதமாக நீங்கள் நடந்துகொள்ளவில்லை. உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அழிப்போம் என்று பீகார் தேர்தலில் மோடி சொல்கிறார். உலகத்தின் எந்த மூலைக்கும் நாம் எப்படி செல்வோம். அமெரிக்கா பின்லேடனை அழித்தபோது அவர்களால் எல்லைத்தாண்டி வர முடிந்தது. உலக நாடுகளின் ஒத்துழைப்பை நாம் வாங்க வேண்டும். ஐ.நாவில் இதுவரை இது குறித்து புகார் அளித்துள்ளோமா? நாம் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க உத்தரவாதம் அளிக்குமா?

இந்தியா வர்த்தக வழித்தடம் அமைக்க அரபு நாடுகளின் உதவியை நாடுகிறோம். அவர்கள் இஸ்லாமிய நாடுகளாகும். நாம் முழுமையாக இஸ்லாமியர்களை எதிர்த்தால் அங்கிருக்கும் இந்தியர்களின் நிலை என்னவாகும். தற்போது அங்கு பல ஆண்டுகளாக உள்ளவர்கள் தங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்கிறார்கள். அதனால் பாஜக ஒட்டுமொத்தமாகவே மத அடிப்படையில் கொண்டு வந்து விட தொடங்கினால், பிற நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களின் நிலை என்னவாகும்? இவ்வவாறு அவர் தெரிவித்தார்.

MUST READ