சென்னை முகப்பேரை சேர்ந்த இன்ப நேசன், லூர்துமேரி மகள்களான செரில் நேசன், ஷெர்லி ஜாஸ்லின் இருவரும் இணைந்து 4 நிமிடம் 34 வினாடிகளில் பைபிளில் உள்ள 100 வசனங்களை அதிவேகமாக மனப்பாடமாக அதிவேகமாக வாசித்து உலக சாதனை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கொங்குநாடு மக்கள் பேரவை பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், சென்னை மாநகராட்சியின் 92 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.வி. திலகர் மற்றும் பாதிரியார்கள், ஆசிரியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெகார்ட்ஸ் ஆகியவை உலக சாதனையாக அங்கீகரித்து கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கின.