spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை - தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட மனைவி…!

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை – தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட மனைவி…!

-

- Advertisement -

கணவனின் கள்ளகாதலை தட்டி கேட்டதில் ஏற்பட்ட சண்டையில் கணவன் தாக்கிய நிலையில் மனமுடைந்த மனைவி வாழ்வை முடித்து கொண்ட சோகம்…!

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை - தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட மனைவி…!சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் நவீனா(30). இவர் நம்பிராஜன் என்பவரை காதலித்து கடந்த 7ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் ஆறு வயதில் ஒரு மகன் உள்ளான்.

we-r-hiring

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கணவர் நம்பி ராஜன் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி நவீனா கணவரின் செல்போனை சோதனை செய்த போது அவர் பல பெண்களோடு தனக்கு திருமணம் ஆகவில்லை எனவும் சிலரிடம் தமக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது எனவும் கூறி தகாத தொடர்பில் இருப்பதை கண்டறிந்துள்ளார்.

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை - தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட மனைவி…!இது தொடர்பாக அவ்வபோது நவீனாவிற்கும் நம்பிராஜனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த சண்டை முற்றி நம்பி ராஜன் நவீனவை தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் மனமுடைந்த நவீனா அதிகாலை 4 மணி அளவில் தனது அறையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

உதயநிதி துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

 

இது தொடர்பாக நவீனாவின் குடும்பத்தினர் அளித்த புகாரில் காசிமேடு போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில். நவீனாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் முழுமை பெறாததால் தண்டையார்பேட்டை ஆர்டிஓ விசாரணைக்காக இவ்வழக்கு சென்றுள்ளது.

MUST READ